Home Blog Page 3942

விவேக்கின் அம்மா இறந்துவிட்டதாக பரவிய செய்தி: ட்விட்டரில் அவர் கொடுத்த விளக்கம்

விவேக்கின் அம்மா சென்ற வருடம் இறந்த நிலையில், தற்போது தான் அவர் இறந்தார் என்பது போல புதிதாக

சினிமா துறையையும் வதந்திகளையும் பிரிக்கவே முடியாது என்கிற நிலை தான் தற்போது உள்ளது. சினிமா நட்சத்திரங்கள் பற்றி நாள் தோறும் ஏதாவது ஒரு செய்தி பரவிக் கொண்டே தான் இருக்கின்றது. குறிப்பாக நடிகர்களின் சொந்த வாழ்க்கை பற்றி வதந்திகள் அதிக அளவில் பரவுகின்றன.

இந்நிலையில் காமெடி நடிகர் விவேக்கின் தாயார் நேற்று இரவு காலமாகி விட்டார் என சமூக வலைத்தளங்களில் சிலர் தகவல் பரப்பி விட்டுள்ளனர். ஆனால் உண்மையில் விவேக்கின் தாயார் சென்ற வருடமே இறந்துவிட்டார். ஒரு வருடம் கழித்து தற்போது அவர் இறந்தது போல ஒரு செய்தியை விஷமிகள் சிலர் இணையத்தில் பரப்பி உள்ளனர். இது பற்றி அறியாத பலரும் இந்த தகவலை அதிகம் ஷேர் செய்து இருக்கின்றனர்.

இது தொடர்பாக பெண் ஒருவர் ட்விட்டரில் விவேக்கை டேக் செய்து ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் “நடிகர் விவேக் சார் அவர்களின் தாயார் 2019ல் இறந்துவிட்டார். ஆனால் நேற்று இரவுதான் இறந்ததாக பொய்யான தகவல் பரப்பபடுகிறது. என்ன ஏது எப்போ என்று சரியாக தெரியாமல் பல பொய்யான தகவல்கள்பரப்பபடுகிறது. ஒரு தமிழனா இருந்தா ஷேர் பண்ணு என்று சொன்னால் எதையுமே யோசிக்காமல் ஷேர் பண்றாங்க” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதில் கூறியுள்ள விவேக் “என் தாயார் இயற்கை எய்தி ஒரு ஆண்டு ஆகிவிட்டது.ஆனால் செய்தி பரப்புவோருக்கு அவர் மேல் அவ்வளவு அலாதி பிரியம் போலும்.இந்த வருடமும் இயற்கை எய்த வைக்கிறார்கள்.போகட்டும் விடுங்கள். For me, my mom still lives with me!!” என தெரிவித்துள்ளார்.

 

பதுளை மாவட்டத்தில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் செந்தில் தொண்டமானுக்கு பாரிய ஆதரவு அலை!!

– மாவட்டம் முழுவதும் 63 தேர்தல் அலுவலகங்கள் அமைப்பு –

பதுளை மாவட்டத்தில் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரங்கள் இடம்பெற்றுவரும் பின்புலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் ஒரேயொரு பலமிகுந்த சிறுபான்மை வேட்பாளரான செந்தில் தொண்டமானுக்கு மாவட்டம் முழுவதும் பெரும்பான்மையினர் மத்தியில் அசைக்க முடியாத செல்வாக்கு ஏற்பட்டுள்ளது.

பதுளை மாவட்டம் முழுவதும் செந்தில் தொண்டமானுக்காக 63 தேர்தல் காரியாலயங்களை பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் அமைத்துள்ளனர். இதுவரை வரலாற்றில் எந்தவொரு மலையக தலைவருக்கும் இந்தளவு செல்வாக்கு பெரும்பான்மை சமூகத்திடமிருந்து கிடைத்திருக்கவில்லை. செந்தில் தொண்டமான்மீது பெரும்பான்மையினருக்கு ஏற்பட்டு அசைக்க முடியாத நம்பிக்கையின் எதிரொலியே இந்த ஆதரவு அலை.

பதுளை மாவட்டத்தில் அதிகூடிய விருப்ப வாக்குகளுடன் செந்தில் தொண்டமானை வெற்றிபெற செய்வதற்காக பெரும்பான்மை சமூகமும் இன்று அவருடன் கைகோர்த்துள்ளது. செந்தில் தொண்டமானின் தலைமைத்துவத்தை ஏற்று அவருடன் இணைந்து பயணிப்பதற்கும், ஊவாவில் இனம், மதம் கடந்து சேவை செய்த ஒரே தலைவராக அவர் உள்ளதாலும் மாவட்டம் முழுவதும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் தேர்தல் அலுவலகங்களை திறந்துள்ளனர்.

ஏற்கனவே, 50இற்கும் அதிகமான பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள் செந்தில் தொண்டமானுடன் கைகோர்த்திருந்துடன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தபால்மூல வாக்களிப்புத் தொடர்பில் பதுளைவாழ் தமிழ் அரச ஊழியர்களிடம் நடத்தப்பட்டிருந்த கருத்துக்கணிப்பில் 80 சதவீதமான வாக்குகள் செந்தில் தொண்டமானுக்கு அளிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதன்மூலம் இம்முறை அமைய போகும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் அதிகாரமிக்க அமைச்சுப் பதவியொன்று கிடைப்பதும் ஊர்ஜிதமாகியுள்ளதால் பெரும்பான்மையினர் மத்தியில் செந்தில் தொண்டமானுக்கு அசைக்க முடியாத செல்வாக்கு ஏற்பட்டுள்ளது.

தொற்றாளர் எண்ணிக்கை உயர்ந்தது

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2745 ஆக உயர்வடைந்துள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய 14 பேருக்கு COVID19 தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த நிலையிலேயே மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 2745ஆக உயர்ந்துள்ளது.

பாலித தெவரப்பெருமமீது தாக்குதல்!

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரான, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமமீது இன்று (22) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர் நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்துகம வேகந்தல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டமொன்று தரம்குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து அது தொடர்பில்  கண்காணிப்பதற்காக பாலித தெவரப்பெரும இன்று சம்பவ இடத்துக்கு சென்றிருந்தார்.

இதன்போது குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் ஒப்பந்த நிறுவன அதிகாரிகளுக்கும், தெவரப்பெருமவுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போதே அவர் தாக்கப்பட்டுள்ளார் என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

” இயந்திரத்தால் தாக்கி துப்பாக்கியைகாட்டி மிரட்டினர்.” – என்று பாலித தெவரப்பெரும தெரிவித்தார்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

‘புதிய பிறப்புச்சான்றிதழில் இனம் வெளிப்படுத்தப்படமாட்டாது’

புதிய பிறப்புச் சான்றிதழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில் அதில் இனம் வெளிப்படுத் தப்படமாட்டாது என்று பதிவாளர் நாயகம் அறி வித்துள்ளார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பிறப்புச் சான்றிதழில் இலங்கையர் என்று மட்டுமே இடம்பெறும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாய் – தந்தையரின் திருமண விவரங்கள் தொடர்பில் சமூகத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகப் பதிவாளர் நாயகம் என்.சீ. விதானகே தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாட்டின் அனைத்து குடிமக்களின் புதிய பிறப்புச் சான்றிதழ் களில் இலங்கையர் எனக் குறிப்பிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிறப்பின்போது ஆள் அடையாளத்தை உறுத்திப்படுத்தும் வகையில் வழங்கப்படும் 12 இலக்கங்களே பிற்காலத்தில் தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களை வழங்குவதற்கு பயன்படுத்தப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இதுவரை காலமும் பிறப்புச் சான்றிதழில் “இலங்கை தமிழர்’ என்றோ அல்லது அது போன்றோ குறிப்பிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குருணாகலை தொல்லியல் சம்பவம் – பிரதமரிடம் அறிக்கை கையளிப்பு

குருணாகலை புவனேக ஹோட்டல் நடத்தப்பட்டுவந்த கட்டிடம் சேதமாக்கப்பட்டமை தொடர்பான இடைக்கால அறிக்கை இன்று (2020.07.22) முற்பகல் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

அறிக்கையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

1) கட்டிடத்தின் முன்பக்கத்தில் கூரையின் ஒரு பகுதிக்கும், ஜன்னல்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது என்பதால் அப்பகுதிகளை தொல்பொருள் ரீதியில் ஆராய்ச்சிக்கு உட்படுத்த வாய்ப்புள்ளது.

முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ள பின்பக்கத்திலுள்ள மரத்தாலான விட்டங்கள் மற்றும் செங்கல்கள் உள்ளிட்ட கட்டிட பொருட்கள் பாதுகாப்பாக உள்ளன. அதனால் இதற்கு முன்னர் தொல்பொருள் திணைக்களத்தினால் விரிவாக
அறிக்கையிடப்பட்டுள்ளதால் மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதால் அந்த பழைமைவாய்ந்த பகுதியை மீண்டும் மீட்டெடுப்பதற்கான வாய்ப்புள்ளது. அதனால் பழைமை வாய்ந்த கட்டிடம் விரைந்து பாதுகாக்கப்பட வேண்டும்.

2) இக்கட்டிடத்தை தொல்பொருள் திணைக்களத்திற்கு கையகப்படுத்துதல்

3) குறித்த இடத்தை விரிவாக்கும் திட்டத்தை திருத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கல்

4) இந்த சேதமாக்கலுக்கு பொறுப்புகூற வேண்டிய நிறுவனம் அல்லது நபர்களினால் பாதுகாப்பிற்கு அவசியமான ஏற்பாடுகளை செய்தல்

பிரதமரின் ஆலோசனைகளுக்கு அமைய புத்தசாசன மற்றும் கலாசார விவகாரங்களுக்கான செயலாளரினால் இந்த குழு நியமிக்கப்பட்டதுடன், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டீ.ஜீ.குலதுங்க, குருநாகல் மாவட்ட கூடுதல் செயலாளர் ஜீ.ஏ.கித்சிறி, மத்திய கலாசார நிதியத்தின் பதில் அபிவிருத்தி பணிப்பாளர் வாஸ்து நிபுணர் சுமேதா மாதொட்ட புத்தசாசன கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சின் பிரதி பணிப்பாளர் தொல்பொருள் ஆய்வாளர் பிரசாத் ரணசிங்க ஆகியோர் குழுவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

‘மொட்டு என்பது குடும்ப கட்சி’ – ஐக்கிய மக்கள் சக்தியே ஜனநாயக கட்சி’

” ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சியை பாதுகாப்பதற்காகவே மொட்டு கட்சி மலர்ந்துள்ளது. ஆனால், நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே ஐக்கிய மக்கள் சக்தி உதயமாகியுள்ளது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி ஹிரண்யா ஹேரத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனநாயகத்துக்கான போராட்டத்தின் விளையாகவே ஐக்கிய மக்கள் சக்தி உதயமானது. எமது கட்சிக்கும், மொட்டுக்கட்சிக்குமிடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

” 1946 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக்கட்சியும் 1951 இல் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் உருவாக்கப்பட்டன. அதன்பின்னர் இவ்விரு கட்சிகளுமே நாட்டை ஆண்டுள்ளன. எனினும், 2016 இல் அரசியலில் மாற்றம் ஏற்பட்டது.

சுதந்திரக்கட்சியில் இருந்து பிரிந்துசென்ற சிலர் மொட்டு கட்சியை ஆரம்பித்தனர். அது தற்போது குடும்பக்கட்சியாகியுள்ளது. ஜனநாயகத்துக்காக மக்களின் கோரிக்கையின் பிரகாரம் உருவாக்கப்பட்டதே சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியாகும்.” எனவும் சட்டத்தரணி ஹிரண்யா ஹேரத் குறிப்பிட்டார்.

ஆண் சிசுவை குழிதோண்டி புதைத்த தாய் – 15 நாட்களுக்கு பின் சடலம் மீட்பு! டிக்கோயாவில் கொடூரம்!!

தனது தாயால் குழிதோண்டி புதைக்கப்பட்ட ஆண் சிசுவொன்று, 15 நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட பெருந்துயர் சம்பவமொன்று ஹட்டன் – டிக்கோயாவில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றினையடுத்து இன்று (22) ஹட்டன் – டிக்கோயா தோட்டத்துக்குச்சென்ற பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய தாயிடம் விசாரணை நடத்தினர்.

அதன்பின்னர் சிசு புதைக்கப்பட்ட இடத்தை அவர் காட்டியுள்ளார். ஹட்டன் நீதிமன்றத்தின் பதில் நீதவானின் கண்காணிப்பின்கீழ் சிசுவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. சட்டவைத்திய அதிகாரியும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தார்.

சிசுவின் சடலம், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இக்கொடூரச்செயலில் ஈடுபட்ட பெண் ஏற்கனவே திருமணமானவர், அவரின் கணவர் உயிரிழந்துவிட்டார் எனவும், அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

பலாங்கொடை குடிநீர் பிரச்சினை – களத்தில் இறங்கினார் ஆனந்தகுமார்

பலாங்கொடை – விகிலிய – அல்தொரவத்த பகுதியில் வாழும் மக்கள் எதிர்நோக்கியுள்ள குடிநீர் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், மாவட்ட வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் கள விஜயமொன்றில் ஈடுபட்டு விடயங்களை ஆராய்ந்துள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள சுமார் 300ற்கும் அதிகமான குடும்பங்கள் இந்த குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக ஊடகங்களில் இன்று செய்தி வெளியாகிய நிலையிலேயே அவர் இந்த கள விஜயத்தில் ஈடுபட்டார்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கிணறு தற்போது முழுமையாக செயலிழந்துள்ளதாக அறிய கிடைத்தது.

கடந்த ஆட்சியாளர்கள் குறித்த கிணறை செய்து கையளித்துள்ள போதிலும், பிரதேச மக்களிடமிருந்து மாதாந்தம் 2000 ரூபாவை அறவிட்டுள்ளதாக பிரதேச மக்கள் ஆனந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இவ்வாறான நிலையில், குறித்த கிணற்றிற்கு பொருத்தப்பட்ட நீரை பெற்றுகொள்வதற்கான இயந்திரம் இரண்டு மாதங்களிலேயே செயலிழந்து விட்டதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தமது அன்றாட நடவடிக்கைகளுக்கு தேவையான குடிநீரை பெற்றுகொள்வதற்கு சுமார் 3 கிலோமீற்றர் தூரம் வரை சென்று நீரை பெற வேண்டிய நிலைமை உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

தமது பிரச்சினைகளை கடந்த ஆட்சியாளர்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை என ஆதங்கம் வெளியிட்ட அந்த பிரதேச மக்கள், தாம் ஆனந்தகுமாரை தற்போது நம்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தேர்தலுக்கு முன்னர் என்னை சிறையில் அடைக்க முயற்சி – பதறுகிறார் ரிஷாட்

பயங்கரவாதச் செயற்பாடுகள் எவற்றுடனும் எந்தத் தொடர்பும் இல்லாத என்னை, சஹ்ரானின் மிலேச்சத்தனமான தாக்குதலுடன் கோர்த்து, தேர்தலுக்கு முன்னர் சிறையில் அடைக்க முயற்சிக்கின்றார்கள் என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும், மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் முஹம்மட் நஸீரை ஆதரித்து, குருநாகல், பொத்துஹெரவில் இன்று (22) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் மேலும் கூறியதாவது,

“குருநாகல் மாவட்டத்துக்கு இன்று வருவேனா என்பது, நேற்றுமாலை வரை எனக்குச் சந்தேகமாகவே இருந்தது. வரமுடியுமா அல்லது வரவிடுவார்களா? என்று எதுவுமே தெரியாத நிலையில் இருந்தேன். கட்சியின் தவிசாளர் அமீர் அலியுடன் தொடர்புகொண்டு, இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டங்களில், என் சார்பில் கலந்துகொள்ள ஆயத்தமாகுமாறும் வேண்டினேன்.

நான் என்ன குற்றம் செய்தேன்? எனக்கு ஏதாவது வழக்கு இருக்கின்றதா? அல்லது தவறு ஏதும் செய்ததாக பொலிஸில் முறைப்பாடு இருக்கின்றதா? 17 வருட அமைச்சுப் பதவி உட்பட, சுமார் 20 வருடகால அரசியலில், என்னைப் பற்றி போலியான கதைகளை பரப்பினார்களேயொழிய, எந்தக் குற்றச்சாட்டும் பொலிஸில் இதுவரை இல்லை.

மக்களுக்கு காணி வழங்கியதற்காக இனவாதிகள் வழக்கிட்டனர். சமூகத்துக்காக பேசியதனால் மதவாதிகள் நீதிமன்றத்தை நாடினர். வேறு எந்த தனிப்பட்ட வழக்கும் எனக்கு இதுவரை கிடையாது.

சஹ்ரானை வாழ்நாளில் கண்டதில்லை. பேசியதில்லை. தொலைபேசியில் கூட கதைத்ததும் இல்லை. ஆனால், வேண்டுமென்றே அந்தக் கயவனின் செயலுடன் என்னையும் தொடர்புபடுத்தி, சிறையில் அடைக்க சதிகள் இடம்பெறுகின்றன.

தேர்தலுக்கு முன்னர் என்னை அடைக்கலாம். எனினும், “இறைவன் பாதுகாப்பான்” என்ற நம்பிக்கை எமக்குண்டு. நமது சமுதாயத்தை அடிமைப்படுத்துவதற்காகவும் பயமுறுத்துவதற்காகவும், சமூகத் தலைமைகளாக அங்கீகரிக்கப்பட்ட எம்மை அச்சுறுத்தி, அடக்கப் பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி, சிறையில் அடைக்கவும் முயற்சிக்கின்றனர். எம்மை அடைப்பதன் மூலம், சமுதாயத்தை பயமுறுத்த முடியும் எனவும் திட்டமிடுகின்றனர்.

எதிர்வரும் 27 ஆம் திகதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருமாறு எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நான் நிரபராதி. எமது நேரத்தை, காலத்தை வீணடிப்பதே இதன் நோக்கம். என்னை சிறையிலடைத்து, பெரும்பான்மையின வாக்குகளை அதிகரித்து, மூன்றிலிரண்டு பாராளுமன்ற பெரும்பான்மை எடுப்பதே இவர்களின் திட்டம். அதன்மூலம், சமூக உரிமைகளை இல்லாமல் செய்வது, சமூகத்தை கையாலாகாததாக மாற்றுவதே இவர்களின் திட்டம். இதில் மக்களாகிய நீங்கள் தெளிவாக இருந்துகொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்துகொள்ளுங்கள்.

குருநாகல் மாவட்டத்தில், இம்முறைத் தேர்தலில், இரண்டு வேட்பாளர்கள் தொலைபேசிச் சின்னத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர். இம்முறை நமது சமூகத்துக்கான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்றால், வரலாற்றில் ஒருபோதுமே பெறமுடியாது போய்விடும்.

முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை தமது கட்சியில் நிறுத்தாதவர்கள், தமது ஏஜெண்டுகளை அனுப்பி, வெட்கமில்லாமல் வாக்குக் கேட்கின்றனர். இவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கினால், நமது சமூகம் தலைகுனிய நேரிடும். நாங்கள் அரசியல் அநாதைகளாகியும் விடுவோம்.

எங்களுக்கு எதுவும் நடக்கலாம். ஆனால், சமூகம் கௌரவத்துடன் வாழ வேண்டும். சமூகத்துக்கு அடித்தால் தட்டிக் கேட்கின்றோம். குருநாகல் மக்களாகிய உங்களுக்கு அடித்தாலும் ஓடி வருகின்றோம். நாங்கள் வரவில்லை என்றால் யார் வருவது? பொம்மைகளாக இருக்க வேண்டுமென்று அவர்கள் நினைக்கின்றார்களா?

இறைவன், குருநாகல் மக்களாகிய உங்களுக்குத் தந்த இந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தினால், உங்களின் தலையெழுத்தை இம்முறை மாற்ற முடியும். சுமார் 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளைக் கொண்ட நீங்கள், தொடர்ந்தும் அரசியலில் தனித்துவிடப்பட முடியாது. எனவே, பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்” என்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: சாணக்கியன் அழைப்பு!

0
தமிழ் மக்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை, சில அரசியல் புல்லுருவிகள் தங்களது சுயநல சுகபோகத்துக்காகத் தடுத்து வருகின்றனர் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற...

பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டம்!

0
பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை மு.ப.9.00 மணிக்கு கல்லூரியின் அதிபரும் பழைய மாணவர் சங்கத் தலைவருமான ஏ.கனகதேரன் தலைமையில் கல்லூரியின்...

மவுண்ட்வேர்ணன் தமிழ் வித்தியாலய பழைய மாணவர்களின் கிரிக்கெட் திருவிழா!

0
கொட்டகலை /மவுண்ட்வேர்ணன் தமிழ் வித்தியாலயத்தின் 1999ஆம் ஆண்டு பழைய மாணவர் தொகுதியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர்களுக்கிடையிலான மாபெரும் சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியும், ஒன்று கூடல் நிகழ்வும் கடந்த 2026.04.16 அன்று பாடசாலை...