



விஷ்ணு நடித்த ராட்சசன் பட கதையை இதற்கு முன்பு 17 ஹீரோக்கள் நிராகரித்து இருக்கிறார்கள் என அவர் கூறி உள்ளார்.
கோலிவுட் சினிமாவில் துவக்கத்திலிருந்து மிக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து, தற்போது முன்னணி ஹீரோவாக வளர்ந்து இருப்பவர் விஷ்ணு விஷால். அவர் நடிப்பில் வரும் படங்களுக்கு ஒரு மினிமம் கேரண்டி வசூல் நிச்சயம் இருக்கிறது என்கிற பேச்சு சினிமா துறையில் எப்போதும் உண்டு.
தற்போது கொரோனா காலகட்டத்தில் பிரபலங்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே முடங்கியிருக்கின்றனர். சினிமா ஷுட்டிங் எதுவும் நடைபெறவில்லை என்பதால் இவர்கள் வேறு வழி இல்லாமல் வீட்டில் தான் இருக்கின்றனர். அதனால் பலரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள். நடிகர் விஷ்ணு விஷால் அப்படி சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். அப்படி சமீபத்தில் அவர் கிரிக்கெட் வீரர் அஸ்வின் உடன் ஒரு பேட்டியில் பங்கேற்றுள்ளார்.
அப்போது தன் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் பற்றி அவர் பேசியுள்ளார். விஷ்ணு ஆரம்பத்தில் கிரிக்கெட் வீரராக தான் தனது கெரியரை துவங்கினார். ஆனால் தனக்கு காயம் ஏற்பட்டதால் கிரிக்கெட்டில் இருந்து விலகி சினிமா பக்கம் வந்து விட்டார். நான் கிரிக்கெட்டை விட வில்லை, கிரிக்கெட் தான் என்னை விட்டு விட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சினிமா என்ற கடலில் குதித்த பிறகு இங்கு உயிர் பிழைத்த இருப்பது தான் முக்கியம் என எண்ணி நான் அனைத்து விஷயங்களும் செய்தேன் என விஷ்ணு விஷால் கூறியுள்ளார். மேலும் ஒவ்வொரு படம் முடித்ததும் அதை திரையில் பார்க்கும் போதும் தனக்கு ஒரு அனுபவம் கிடைக்கும் என கூறும் அவர், ஒரு கட்டத்தில் தனக்கு கான்ஃபிடன்ஸ் கிடைத்தது. நான் முடிவு செய்தால் அதில் 80 சதவீதமாவது சரியாக இருக்கிறது என எனக்கு தோன்றியது. அந்த சமயத்தில் தான் நான் ராட்சசன் படத்தில் நடிக்க முடிவு எடுத்ததாகவும் கூறியுள்ளார்.
விஷ்ணு நடித்த பல கதைகள் பல ஹீரோக்கள் நிராகரித்த கதைகளாக தான் இருந்தது என்றும் விஷ்ணு தெரிவித்துள்ளார். ராட்சசன் படத்தின் கதையை 17 ஹீரோக்கள் மற்றும் 22 தயாரிப்பாளர்கள் நிராகரித்து அதற்குப் பிறகு தான் தன்னிடம் வந்தது என்று கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் ராட்சசன் படம் தன் கையை விட்டு போனது என்றும் மீண்டும் அது தன்னைத் தேடி வந்தது என்றும் விஷ்ணு கூறியுள்ளார். பிறகு அவர் இந்த படத்தில் நடித்தது மிகப்பெரிய ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. அதே போலத்தான் விஷ்ணு முன்னர் நடித்த முண்டாசுப்பட்டி என்ற படத்தின் கதையும் பல ஹீரோக்களை தாண்டித்தான் இவருக்கு வந்தது என கூறி உள்ளார்.
விஷ்ணு சினிமாவில் நடிக்கத் தொடங்கி ஒரு சில படங்கள் ப்ளாப் ஆனதால் அதற்கு பிறகு தனக்கு வரும் படங்களை உடனே ஒப்புக் கொள்ளாமல் பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்க துவங்கினாராம் அவர். தன்னிடம் வந்த பதினோரு படங்களை அவர் வேண்டாம் என ரிஜெக்ட் செய்திருக்கிறாராம். இந்த படங்கள் கமர்ஷியல் காமெடி என நன்றாக இருந்தாலும் வித்தியாசமாக இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவற்றை வேண்டாம் என கூறி இருக்கிறாராம். மாதக் கணக்கில் வீட்டில் சும்மா கூட இருந்திருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது பிரபலமாக இருக்கும் ஒடிடி தளங்கள் பற்றி பேசிய அவர், தமிழ் சினிமாவில் அவை மிகவும் பிரபலம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் இதில் கவனம் செலுத்தாமல் இருப்பது தான் என தெரிவித்துள்ளார். மக்களும் தியேட்டர்களுக்கு சென்று பெரிய கொண்டாட்டத்துடன் படத்தை பார்ப்பதற்கு தான் விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதனால் தான் OTT தளங்களில் அதிகம் யாரும் கவனம் செலுத்துவதில்லை என விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
– நன்றி சமயம்.கொம்
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் பூனம் பஜ்வா கலந்து கொள்வதாக தகவல்
பரத்தின் சேவல் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா. ஜீவாவின் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, ஜி.வி. பிரகாஷின் குப்பத்து ராஜா, அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தன் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் பூனம் பஜ்வா. இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் பூனம் பஜ்வா போட்டியாளராக கலந்து கொள்கிறார் என்று பேச்சு கிளம்பியது.
பூனம் பஜ்வா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நெருக்கமான ஒருவர் உறுதி செய்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருக்க பூனம் பஜ்வாவுக்கு ரூ. 45 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். முந்தைய சீசனை போன்றே இந்த சீசனையும் நாகர்ஜுனா தான் தொகுத்து வழங்கவிருக்கிறார். அவருக்கான சம்பள விபரம் இதுவரை வெளியாகவில்லை.
அடுத்த மாதத்தில் இருந்து தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்க அவர்கள் ஏற்பாடு செய்வதை பார்த்து தமிழ் ரசிகர்கள் லைட்டா கவலை அடைந்துள்ளனர்.
வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பினாலாவது பொழுது போகும். ஆனால் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு நடப்பது போன்றே தெரியவில்லையே என்று தமிழ் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்
இதற்கிடையே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒப்புக் கொள்கிறீர்களா இல்லையா என்று கேட்டு ஓவியா ட்வீட் செய்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் டிஆர்பிக்காக போட்டியாளர்கள் டார்ச்சர் செய்யப்படுவதாக ஓவியா கூறியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியாவே இப்படி கூறியிருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பிக்காக போட்டியாளர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். இது எல்லாம் நிஜம் இல்லை வெறும் ஸ்க்ரிப்ட். கொடுத்த காசுக்காக நாங்கள் ஒரு கேம் ஷோவில் சண்டை போடுவதை பார்த்துவிட்டு நிஜ வாழ்க்கையில் எங்களை விளாசுவது சரியில்லை என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலர் முன்பு தெரிவித்தனர்.
பிக் பாஸ் ஒரு கேம் ஷோ. அதை வைத்து என்னை நிஜத்தில் மதிப்பிட வேண்டாம் என்று வனிதா விஜயகுமார் கூட தொடர்ந்து கூறி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டபோது ஜூலி சொன்ன பொய்க்காக இன்னும் சமூக வலைதளங்களில் அவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் அவர் கலந்து கொள்கிறார், இவர் கலந்து கொள்கிறார் என்று தகவல் வெளியானதே தவிர இதுவரை ப்ரொமோ வீடியோ கூட வரவில்லை. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை செப்டம்பர் மாதம் துவங்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு நடக்குமா என்று தெரியாத நிலையில் தெலுங்கு, இந்தியில் நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ரஜினி நடிக்கும் அண்ணாத்த படம் பற்றி கடந்த சில நாட்களாக பல வதந்திகள் பரவி வருகின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். வழக்கமாக சிவா இயக்கும் படங்களில் குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் சென்டிமென்ட் அதிகம் இருக்கும் என்பதால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இதில் அண்ணன் தங்கை பாசம் பற்றிய சென்டிமென்ட் காட்சிகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தான் இந்த படத்திற்கு அண்ணாத்த என சிவா பெயரிட்டு இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
சென்ற வருடம் துவங்கிய அண்ணாத்த படத்தின் ஷுட்டிங் ஹைதராபாத்தில் நடந்து வந்தது. அந்த நேரத்தில் கொரோனா பிரச்சனை வெடித்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகும் நிலையில் தற்போது வரை ஷூட்டிங் மீண்டும் நடத்த முடியாமல் படக்குழு இருக்கிறது.
முதலில் இந்த வருடம் தீபாவளிக்கு அண்ணாத்த படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் கடந்த மே மாதம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் அண்ணாத்த படம் 2021 பொங்கல் பண்டிகைக்காக ரிலீஸாகும் என குறிப்பிட்டிருந்தனர். ஆனால் தற்போது நான்கு மாதங்களுக்கு மேல் ஷூட்டிங் நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதாலும், மேலும் மீண்டும் ஷுட்டிங் எப்போது துவங்கும் என்பது தெரியாத நிலையில் இருப்பதாலும் அடுத்த வருடம் பொங்கலுக்கு அண்ணாத்த வெளியாவது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா பிரச்சனைக்கு நடுவில் மீண்டும் ஷூட்டிங் நடத்துவது தற்போதைக்கு சாத்தியமில்லாத ஒன்று என்று ரஜினி கருதுகிறார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இணையத்தில் பரவி வரும் வதந்தி என்னவென்றால் அண்ணாத்த படத்திற்காக வாங்கிய சம்பளத்தை ரஜினி திருப்பிக் கொடுத்து விட்டார் என்பது தான். மேலும் படப்பிடிப்பு நடத்த பல்வேறு சிக்கல்கள் இருக்கும் நிலையில் அந்தப் படம் டிராப் ஆகிவிட்டது என்று கூட செய்திகள் பரவி வருகிறது. கொரோனா காரணமாக அதிக அளவு நஷ்டம் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுவதாக கூறப்படும் நிலையில் சம்பளத்தை குறைக்கும்படி ரஜினியிடம் தயாரிப்பு நிறுவனம் கேட்டதாக கூறப்படுகிறது, அதற்கு பிறகு தான் தான் வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுத்து விட்டார் என செய்திகள் பரவி வருகிறது.
ஆனால் இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் தயாரிப்பாளர் சம்பளத்தை குறைக்க கேட்கவே இல்லை என்றும் மற்றொரு விளக்கமும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் கொரோனா வைரஸ் பரவல் முற்றிலும் நின்ற பிறகு தான் நடக்கும் எனத் தெரிகிறது. வழக்கமாகவே ரஜினி படங்களுக்கு இப்படி வதந்திகள் வருவது புதிதல்ல என்று கூட சிலர் சொல்கின்றனர்.
கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டாருடன் நடிப்பது இது தான் முதல் முறை அவர் இதற்கு முன்பு இது பற்றி உருக்கமாக ஒரு பேட்டியில் பேசி இருந்தார். கீர்த்தி சுரேஷ் தான் நடிக்கும் படங்களில் 20 முதல் 30 சதவீதம் வரை சம்பளத்தை குறைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
” நாட்டில் சமரஷ்டி முறைமை இருந்திருந்தால் கொரோனாவால் வடக்கு, கிழக்கில் பெரும் சீரழிவுகள் ஏற்பட்டிருக்கும்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ஸ தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களின் பதவிகள் பறிபோயும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2018 பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளாட்சி சபைத்தேர்தலின்போது ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தின்கீழ் தமிழ் முற்போக்கு கூட்டணி நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டது.
குறிப்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்கள் யானை சின்னத்தின்கீழ் களமிறங்கி வெற்றிபெற்றவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் விரைவில் அந்த பக்கமா, இந்த பக்கமா என முடிவொன்றை எடுக்காவிட்டால் பதவிகள் பறிக்கப்படும் என கட்சியின் உயர்பீடம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் முரண்பாடு அதிகரித்து, அக்கட்சிக்கு சார்பானவர்களை ஐ.தே.க. நீக்கும் பட்சத்தில், யானை சின்னத்தின்கீழ் போட்டியிட்ட முற்போக்கு கூட்டணிக்கும் நெருக்கடி ஏற்படும் என கூறப்படுகின்றது.
அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதான பங்காளிக்கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி, கொழும்பிலும், கண்டி மாவட்டத்திலும் சொந்த சின்னத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. எனவே, அக்கட்சி உறுப்பினர்களுக்கு சிக்கல் ஏற்படாது. திகா கட்சி உறுப்பினர்களுக்கே நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும். எனவே, அந்த வெற்றியில் மலையக மக்களும் பங்காளிகளாகவேண்டும் – என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மொட்டு சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் முத்தையா பிரபுவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
” மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்படவேண்டிய பல வேலைத்திட்டங்கள் உள்ளன. அவற்றை செய்வதற்காகவே முத்தையா பிரபு அரசியலுக்கு வந்துள்ளார். எனவே, அவருக்கும் ஒரு வாய்ப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
தேர்தலில் மொட்டுதான் வெற்றிபெறும். எனவே, நாம் வெற்றியின் பங்காளிகளாகி அபிவிருத்தியை நோக்கி பயணிக்கவேண்டும்.” – என்றும் முரளி கூறினார்.
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 20 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு, தம்புள்ள, கண்டி மற்றும் அம்பாந்தோட்டையிலுள்ள சர்வதேச மைதானங்களில் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
20 -20 குறித்த போட்டி தொடரில் 5 அணிகள் பங்கேற்கவுள்ளன. கொழும்பு, தம்புள்ளை, கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணம் என அணிகளுக்கு பெயரிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்களும் அணிகளில் இடம்பெறவுள்ளனர்.
‘ஊவா இளைஞர்களின் இதயத்துடிப்பை நனவாக்கும் அபரீத முயற்சியில் செந்தில் தொண்டமான்’
– பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அங்கீகாரம் –
ஊவா மாகாணத்தில் 70 தோட்டப் பிரிவுகள் காணப்படும் நிலையில் ஒவ்வொரு 7 தோட்டப் பிரிவுகளுக்கும் ஒரு தொழிற்சாலையை உருவாக்குவது தொடர்பிலான செந்தில் தொண்டமானின் எண்ணக்கருவுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அங்கீகாரம் அளித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் ஹப்புத்தளையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின் போது ஊவாவில் கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட வேட்பாளர் செந்தில் தொண்டமான், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் விசேட கோரிக்கையை முன்வைத்திருந்தார். இதுதொடர்பில் பிரதமருடன் இடம்பெற்றுள்ள கலந்துரையாடலின் போதே 7 தோட்டப் பிரிவுகளுக்கு ஒரு தொழிற்சாலைவீதம் அமைப்பதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் அடுத்த ஐந்தாண்டுகாலப் பகுதியில் ஊவா இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகள் அவர்களின் வசிப்பிடங்களை அண்டியே உருவாக்கப்படும். கொழும்பிலும் நாட்டின் ஏனைய புறநகர் பகுதிகளிலும் குறைந்த சம்பளத்திற்கு மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் பணியாற்றிவரும் ஊவா இளைஞர், யுவதிகளுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள்; பொற்காலமாக மாறவுள்ளது.
தோட்டப்புறங்களில் பயன்படுத்தாமல் காணப்படும் 5 ஏக்கர் காணியை கொண்டு ஒவ்வொரு தொழிற்சாலையும் அமைக்கப்படும். சர்வதேச அங்கீகாரம் பெற்ற கம்பனிகளை ஒரு வருடத்திற்கு இரண்டு என்ன அடிப்படையில் அமைப்பதற்கான உத்தரவாதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, செந்தில் தொண்டமானிடம் வழங்கியுள்ளார்.
இவ்வாறு உருவாக்கப்படும் ஒரு தொழிற்சாலையில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் தொழில்வாய்ப்புகளை பெறுவர். அனைவருக்கும் அரசப் பணியை வழங்குவதென்பது முடியாத காரியம். ஒரு தோட்டத்தில் 10 சதவீதமானவர்களுக்கு அரசப் பணிகளை வழங்க முடியும். ஆனால், தனியார் துறைமூலம் அதிக சம்பளத்துடன், இவ்வாறான மாற்றுவழி தொழில்வாய்ப்புகளை உருவாக்க முடியும். இதுவரை எந்தவொரு மலையக தலைமையும் கண்டிறாத கனவையே நனவாக்கும் முயற்சியை செந்தில் தொண்டமான் முன்னெடுத்துள்ளார்.
ஆகவே, படித்துவிட்டு உரிய தொழில்வாய்ப்புகளின்றி கொழும்பில் கடினமான சூழலில் பணியாற்றிவரும் ஊவா இளைஞர்களும் தோட்டப்புறங்களில் வேலைவாய்ப்பின்றி அல்லல்படும் இளைஞர், யுவதிகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமது சொந்த ஊரியில் நெஞ்சை நிர்த்துக்கொண்டு தன்மானத்துடன் செல்வதற்கான வாய்ப்புகளை அமையபோகும் பலமான அரசாங்கத்தின் மூலம் செந்தில் தொண்டமான் உறுதியாக ஏற்படுத்திக்கொடுப்பார்.
கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை வெறும் 30 நொடிகளில் கண்டறியும் அதி நவீன கருவியொன்றை தயாரித்துள்ளதாக இஸ்ரேலை சேர்ந்த நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. சில நாடுகளில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அதிக அளவில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை தொடக்கம் முதலே உலக சுகாதார நிறுவனம் வழங்கி வருகிறது.
இருப்பினும், பரிசோதனை கருவிகளின் உற்பத்தி, விலை, விநியோகம் உள்ளிட்ட காரணங்களால் இன்னமும் பல்வேறு நாடுகளில் அவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், இஸ்ரேலை சேர்ந்த நானோசென்ட் என்னும் தனியார் நிறுவனம் ஒருவரது மூச்சை மட்டுமே அடிப்படையாக கொண்டு கோவிட்-19 நோய்த்தொற்றை கண்டறியும் கருவியை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த கருவி 85 சதவீதம் சரியான முடிவுகளை அளிப்பது தெரியவந்துள்ளதாகவும், கொரோனாவுக்கு எதிரான களப்பணியில் “முன்னணியில் செயல்படும்” என்று எதிர்பார்க்கப்படும் இந்த கருவிக்கு அடுத்த சில மாதங்களில் ஒப்புதல் கிடைக்குமென்றும் அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த கருவி எப்படி செயல்படுகிறது?
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடனான தொடர்பு, அறிகுறிகள் உள்ளிட்ட கேள்விகள் பரிசோதனை மேற்கொள்பவர் வைத்துள்ள திறன்பேசியில் கேட்கப்படும்.
அடுத்த கட்டத்தில், பரிசோதனைக்கு உட்படுபவர் மூக்கின் வாயிலாக மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு, அதை நிலைநிறுத்திய பின், மூக்கின் ஒரு துளையை மூடிக்கொண்டு மற்றொரு துளை வழியாக ஒரு குழாயில் மூச்சுவிடவேண்டும். அந்தக் குழாய் வழியாக செல்லும் மூச்சுக்காற்று “ஏர் ட்ராப்” என்னும் சிறிய பையை சென்றடையும்.
அந்த குழாய் பின்னர் “சென்ட் ரீடர்” என்னும் ஒரு சிறிய செவ்வக சாதனத்தில் சொருகப்படுகிறது. இது பையில் இருந்து காற்றை உறிஞ்சும்போது மென்மையாகச் சுழல்கிறது.
அடுத்த சில நொடிகளில் நோய்த்தொற்று பரிசோதனைக்கான முடிவு திறன்பேசியில் வெளிவருவதாக இந்த சோதனையை நேரில் சென்று மேற்கொண்டு பார்த்த ஏ.எஃப்.பி. செய்தி முகமையின் செய்தியாளர் கூறுகிறார்.
விலை என்ன?
வடக்கு இஸ்ரேலில் உள்ள நானோசென்ட்டின் தலைமையகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த கருவியை மென்மேலும் மேம்படுத்தி வருகின்றனர். இந்த பரிசோதனை முறையானது “மூச்சுக்காற்றிலுள்ள வாசம் மற்றும் வாசத்தின் வகைகளை” நம்பியுள்ளது என்று இந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான ஓரன் காவ்ரிலி கூறியதாக ஏ.எஃப்.பி. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலை சேர்ந்த ஏறக்குறைய 1,000 கோவிட்-19 நோயாளிகளின் சுவாசத்தை ஆராய்ந்த பின்னர், வைரஸுடன் தொடர்புடைய கண்டறியக்கூடிய வாசனையை தங்களது நிறுவனம் அடையாளம் காண முடிந்ததாக அவர் மேலும் கூறினார்.
“கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கண்டறியும் தற்போதைய ஆய்வக அடிப்படையிலான பரிசோதனைகளுக்கு மாற்றாக இந்த கருவி இருக்க முடியாது. ஆனால், மிகப் பெரிய அளவில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய இடங்களில் இந்த கருவியை பயன்படுத்தி அதில் நோய்த்தொற்று உள்ளதாக உறுதிசெய்யப்படுபவர்களை முறைப்படி முழுபரிசோதனைக்கு உட்படுத்தலாம்.”
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் தற்போது நடைமுறையிலுள்ள உடல்வெப்ப பரிசோதனை முறைகளுக்கு மாற்றாக கருதப்படும் இந்த கருவியை கொண்டு ஒருவருக்கு பரிசோதனை செய்ய சராசரியாக 700 ரூபாய் செலவாகும் என்று நானோசென்ட் கூறுகிறது.