Home Blog Page 45

சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள் – ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் மீதான தாக்குதலை உறுதிப்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்’ என்று அந்நாட்டுக்கு பகிரங்க எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் ட்ரம்ப் பகிர்ந்த பதிவில், “ஈரானின் புரட்சிகர இஸ்லாமியப் படையினருக்கும், ஆயுதப் படைகளுக்கும், காவல் துறைக்கும், நான் இன்றிரவு ஓர் எச்சரிக்கையை விடுக்கிறேன். உங்கள் ஆயுதங்களைத் துறந்து சரணடையுங்கள்… உங்கள் மீதான நடவடிக்கைகள் நிறுத்தப்படும். இல்லாவிட்டால், உறுதியாக மரணத்தை எதிர்கொள்வீர்கள்” என்று எச்சரித்துள்ளார்.

மேலும், இந்தத் தாக்குதல், ஈரான் தனது அணுசக்தி மையங்களில் மீள்கட்டமைப்பு செய்வதை தடுக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டதாகவும் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக, இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டாக ஈரான் மீது தீவிரத் தாக்குதலை தொடங்கியுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா ‘ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’ (Operation Epic Fury) என்று பெயரிடப்பட்டுள்ளது. பதிலடிக்கு ‘ஆபரேஷன் ரோர் ஆஃப் தி லயன்’ ( Operation Roar of the Lion ) என்று ஈரான் பெயர் வைத்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் – அமெரிக்க ராணுவ கூட்டுத் தாக்குதல் ஈரானின் அரசு கட்டிடங்கள், ராணுவ நிலைகளைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அதிகாரபூர்வ அலுவலகத்தையும் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.

ஈரானுடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியை ட்ரம்ப் வெளிப்படுத்திய சில நாட்களிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான் அணுகுண்டை தயாரிக்க மாட்டேன் என உறுதியளிக்க வேண்டும் என்பதுதான அமெரிக்காவின் நிபந்தனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தத் தாக்குதலை ட்ரம்ப் புகழ்ந்துள்ளார். “அமெரிக்கர்களுக்கான அச்சுறுத்தல்களை துடைத்தெறியும் தாக்குதல் இது. ஈரான் மீள் கட்டமைக்கும் அணு ஆயுதங்களை அழிப்பதே எங்களின் திட்டம். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க அமெரிக்க ஒருபோதும் அனுமதிக்காது” என்று கூறியுள்ளார்.

ஈரான் ராணுவம், காவல் துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப், ஈரான் மக்களுக்கான ஒரு செய்தியையும் கூறியுள்ளார்.

அதில் ட்ரம்ப், “சக்திவாய்ந்த ஈரானிய மக்களே, இன்றிரவு உங்களுக்கு நீங்கள் விரும்பிய சுதந்திரம் கைகளில் கிட்டும். அதுவரை பாதுகாப்பாக இருங்கள். வீடுகளை விட்டு வெளியே செல்லாதீர்கள். வெளியே ஆபத்துள்ளது. குண்டுகள் எங்கு வேண்டுமானாலும் விழக்கூடும். எல்லாம் முடியட்டும். உங்களுக்கான அரசை நீங்களே உருவாக்குங்கள். அது உங்களிடமே விடப்படும்” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

கச்சத்தீவு திருவிழா நிறைவு: பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு!

 

வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது நேற்று (27) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று (28) நிறைவடைந்தது.

நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அடிகளால் திருவிழாக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு உற்சவ நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து, சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி என்பன இடம்பெற்றன.

அத்துடன், யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையில், பல பங்குத்தந்தையர்களின் பங்குபற்றலுடன் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

தொடர்ந்து இன்றைய தினம் காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையில், இலங்கை மற்றும் இந்திய அருட்தந்தையர்கள் இணைந்து, திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்றைய தினம் (28.02.2026)காலை திருப்பலி ஒப்புக்கொடுத்தலுடன் நிறைவடைந்தது.

இலங்கை இந்திய பக்தர்களின் உறவுப் பாலமாகவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்த ஆண்டு 13, 500ற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதிலடியை ஆரம்பித்தது ஈரான்: அமெரிக்கா எச்சரிக்கை!

 

“ஈரான் நாட்டின் ஏவுகணைகள் அனைத்தையும் நிர்மூலமாக்குவோம்.” – என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் சூளுரைத்துள்ளார்.

ஈரான்மீது அமெரிக்காவும்,இஸ்ரேலும் கூட்டு தாக்குதலை முன்னெடுத்துவரும் நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறு சூளுரைத்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதி அலுவலகம், உச்சத் தலைவரின் வளாகம், புலனாய்வு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், அணுசக்தி நிறுவனம் உள்ளிட்டவைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ அமெரிக்கர்களை பாதுகாப்பதே எங்களின் நோக்கம். ஈரான் எப்போதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க கூடாது.

ஈரானில் ஆட்சியில் உள்ள அச்சுறுத்தல்களை அகற்றுவதே எங்கள் முக்கிய நோக்கம்.

ஈரானில் மிகப்பெரிய அளவில் தாக்குதலை அமெரிக்கா முன்னெடுத்திருக்கிறது. அணு ஆயுத மறுகட்டுமானத்திற்கு ஈரான் முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

ஈரான் நாட்டின் ஏவுகணைகள் அனைத்தும் நிர்மூலமாக்குவோம். பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதில் உலகத்திலேயே ஈரான் முதலிடத்தில் உள்ளது.”எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இஸ்ரேல், அமெரிக்கா மீது விரைவில் பதில் தாக்குதல் நடைபெறும் என ஈரான் தெரிவித்துள்ளது.

அதேவேளை, இஸ்ரேல் நகரங்கள்மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு ஈரான் பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளது.

அத்துடன், மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க படை தளங்கள்மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என தெரியவருகின்றது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரான்மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டு தாக்குதல்!

ஈரான்மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து இன்று வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளன.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பல்வேறு இடங்களில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“The Shield of Judah” என்ற பெயரிலேயே தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

தெஹ்ரானில் உள்ள முக்கிய இராணுவ தளங்கள் மற்றும் அரசியல் மையங்கள் இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் ஜனாதிபதியின் வாசஸ்தலம், புலனாய்வுத்துறை அமைச்சகம், முக்கிய அரசியல் தலைவர்களின் இருப்பிடங்கள், உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி அலுவலகத்திற்கு அருகிலுள்ள பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனவே, ஈரானின் ஆன்மீகத் தலைவர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் “உடனடி அவசர நிலை” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மக்களுக்கு எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டுள்ளன. ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளின் வான்வெளிகளில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தனது இராணுவப்படைகளை மத்திய கிழக்கில் குவித்து வந்த நிலையில், இந்த நேரடி தலையீடு முழு அளவிலான போருக்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டாபயவை கைது செய்ய ஏற்பாடு: விமல் குற்றச்சாட்டு!

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.”

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஓர் அங்கமாகவே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்ட சஹ்ரான் போன்ற ஒருவர், தீவிர சிங்கள பௌத்தராக அறியப்படும் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்க தனது உயிரைத் தியாகம் செய்வார்களா? ” என்று விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார்.

மேற்படி தாக்குதல்களின் உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அதேவேளையில், தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

“சஹ்ரானுடன் தொடர்புகளைப் பேணியதாக சாலே மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

புலனாய்வுத்துறை அதிகாரிகள் சஹ்ரான்கள் மற்றும் பிரபாகரன்களுடன் மட்டுமல்ல, அனைவருடனும் தொடர்பு கொள்கிறார்கள்.

தீவிரவாத நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தவுடன் சஹ்ரானை கண்காணிக்கத் புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்தது.” எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

அரச பங்காளியாக முற்போக்கு கூட்டணி இருந்த காலமே மலையகத்துக்கு பொற்காலம்!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் முகநூல் பதிவு,

“தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் (2015-2019) அங்கம் வகித்த நான்கே வருடம் தான் மலையக பொற்காலம்.

காணி, வீடு, பிரதேச சபை, பிரதேச செயலகம், வீதி, கோவில், சனசமூக நிலையம், அடங்கிய மலையக தமிழ் கிராமம், என்பவைகளை அரசாங்க கொள்கை சட்டமாக முன்னெடுத்த காலம்.

மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால், பெருந்தோட்ட துறையில் முறை மாற்றம் (System Change) செய்து, “தொழிலாளி”யை, “பங்காளி”யாக மாற்றும் பணியை ஆரம்பித்திருப்போம்.
இதை புரிந்து கொள்ள முடிந்தவர்கள், புரிந்து கொள்வார்கள்.

சுரேஷ் சாலேவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கடந்த 25ஆம் திகதி காலை மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சினால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக, அவரை 90 நாட்கள் காவலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விசாரணைகள் தொடரும்போது மேலும் முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழையுமா பாகிஸ்தான்?

KANDY,SRI LANKA - FEBRUARY 27: Dasun Shanaka (R) of Sri Lanka during an ICC Men's T20 World Cup India & Sri Lanka 2026 net session at Pallekele International Cricket Stadium on February 27, 2026 in Mumbai, India. (Photo by Sameera Peiris-ICC/ICC via Getty Images)

டி20 உலகக்கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது.

இலங்கை அணி சூப்பர்8 சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்திடம் அடுத்தடுத்து தோற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

எனவே, இன்றைய போட்டி பாகிஸ்தான் அணிக்கே முக்கியத்துவம் பெறுகின்றது.

முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி ஒரு புள்ளியுடன் 3-வது இடத்தில் இருக்கிறது.

நியூசிலாந்து அணி, இங்கிலாந்திடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தானுக்கு அரைஇறுதிக்கான கதவு திறந்துள்ளது.

எனவே, இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் இமாலய வெற்றி கண்டு, நிகர ஓட்ட விகிதத்தில் நியூசிலாந்தை முந்தினால் அரைஇறுதி வாய்ப்பை பெற்று விடும்.

பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடினால் குறைந்தது 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

2-வது பேட்டிங் செய்தால் 13.1 ஓவருக்குள் இலக்கை விரட்டிப் பிடிக்க வேண்டும்.

கண்டி, பல்லேகல மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். தற்போது ‘தாய் கிழவி’ குறித்து ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “பெண்மையின் சாரத்தையும் வலிமையையும் இவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படம் கண்டிப்பாக அனைவரது மனதையும் தொடும். ரொம்ப நன்றாக இருக்கிறது.

இயக்குநர் சிவகுமார் முருகேசன் இது உண்மையில் உங்கள் முதல் படமா? நமது சமூகத்துக்கு நீங்கள் என்ன ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லியிருக்கிறீர்கள்… இவ்வளவு கண்ணியமான நகைச்சுவை மற்றும் எளிமையுடன். உங்கள் கதையைப் பார்த்து ஒரு பெண்ணாக மிகவும் பெருமைப்படுகிறேன். உங்கள் சிந்தனை மற்றும் செயல்முறை உங்களது கதாபாத்திரத்தை உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

ராதிகா போன்ற ஒரு சக்திவாய்ந்த திறமையாளருக்கு அவர் உண்மையிலேயே தகுதியான மேடையை வழங்கியதற்கு சிவகார்த்திகேயனுக்கு நன்றி. வயது தடையை மீறி ஒரு பெண்ணையும் அவரது திறமையையும் பற்றிய படத்தை உருவாக்கியதற்கு நடிகைகள் குழுவினர் சார்பாக நன்றி. பெண்களுக்கு இவ்வளவு முக்கியமான ஒரு படத்தை உங்கள் நட்சத்திர சக்தியுடன் ஆதரித்ததற்கு நன்றி.

நீங்கள் என்னை ஆச்சரியப்படுத்துகிறீர்கள் ராதிகா சரத்குமார்! மிகவும் உத்வேகம் தருகிறீர்கள்! இந்த வேடத்தில் உடல் ரீதியாக எவ்வளவு கடின உழைத்துள்ளீர்கள் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க இயலவில்லை.

’தாய் கிழவி’ வெறும் சக்தி வாய்ந்தவராகவும், புத்திசாலியாகவும் மட்டுமல்லாமல், மிகவும் அழகானவராகவும் இருந்தார், அவர் திரைக்கு வெளியே ராதிகாவின் பிரதிபலிப்பு. உங்கள் உடல் மொழி, ஸ்டைல், அப்பாவித்தனம், உங்கள் குரல் மாற்றம், உங்கள் சிரிப்பு, வசனம் மற்றும் உங்கள் சிறிய சைகைகள் மூலம் எங்கள் இதயங்களைக் கொள்ளை கொண்டீர்கள்.

இது ஒரு நடிகராக உங்களை வேறுபடுத்துகிறது! எனக்கு ’தாய் கிழவி’ என்பது பெண்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ஒரு பொழுதுபோக்கு படம் மட்டுமல்ல. இது சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம்” என்று தெரிவித்துள்ளார் ஜோதிகா.

மரக்கறி விலைப்பட்டியல் (28.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சினிமா

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

செய்தி

மத்திய கிழக்குக்கு சிறப்பு தூதுவர்களை அனுப்பும் தென்கொரியா!

0
எரிசக்தி தேவைகளுக்காக வெளிநாடுகளை பெரிதும் நம்பியிருக்கும் தென் கொரியா, தமக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிறப்புத் தூதுவர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. சவுதி அரேபியா, ஓமான் மற்றும் அல்ஜீரியா ஆகிய...

இஸ்ரேல், அமெரிக்க தாக்குதலில் ஈரானில் 6 சிறார்கள் பலி!

0
ஈரான் தெஹ்ரான் மாகாணத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த வான்வழித் தாக்குதலில் பத்துக்கும் குறைவான வயதுடைய ஆறு சிறுவர்கள் கொல்லப்பட்டதாக Fars news நிறுவனம்...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...