Home Blog Page 54

மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் மூன்று செயல் திட்டங்கள் பதுளையில் முன்னெடுப்பு!

 

மலையக கல்வி அபிவிருத்தி மன்றம், பதுளை மாவட்டத்தில் வாழும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் கல்வி முன்னேற்றத்தையும் மேம்படுத்தும் நோக்கில் மூன்று முக்கிய செயல் திட்டங்களை நேற்று (22) முன்னெடுத்தது.

கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் பிரம்டன் தமிழ் ஒன்றியம் மற்றும் கொழும்பை மையமாகக் கொண்ட மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் ஆகியவற்றின் பூரண அனுசரணையில், டித்வா புயல் தாக்கத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேசத்திற்குட்பட்ட யூரி தோட்டம் மற்றும் லுணுகல பிரதேசத்திற்குட்பட்ட மடுல்சீமை, கல்லுள்ள, டூமோ தோட்டப் பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு எரிவாயு அடுப்புகள், மின்சார கேத்தல்கள், சமையல் பாத்திரங்கள், உடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நேரடியாக வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், ஹொப்டன் – கெஹெல்வத்தை தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளின் கலை, கலாசாரம் மற்றும் வாசிப்புத் திறன்களை ஊக்குவிக்கும் முகமாக ஸ்ரீ மணி வாசகர் மண்டபத்திற்கு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

அத்துடன், லுணுகலை சுவிண்டன் தமிழ் வித்தியாலயத்திற்கு தேவையான காரியாலய ஒழுங்கமைப்பு உபகரணங்களும் மன்றத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டன.

இந்த மூன்று செயல் திட்டங்களும் மலையகப் பகுதிகளில் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊக்கமாக அமைந்தன.

இந்நிகழ்வில் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் பணிப்பாளர் கே. சிவசுப்பிரமணியம், தலைவர் ஏ. சிவஞானம், கருத்தரங்கு பரீட்சைகள் பொறுப்பாளர் வி.பி. ஏகாம்பரம், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஹேரோஷன் குமார், நிர்வாக உறுப்பினர் பிரதீபன் உள்ளிட்டோர் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, உயரிய சேவைகளை முன்னெடுத்துவரும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தினரை பிரதேச மக்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

– நடராஜா மலர்வேந்தன்
பசறை நிருபர்

நாமலின் ஒக்ஸ்போர்ட் யூனியன் உரையும் ரத்து!

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் யூனியனும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் உரை நிகழ்வை ரத்துச் செய்துள்ளது.

தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, ஒக்ஸ்போர்ட் யூனியன் இந்த முடிவை எடுத்துள்ளது.

திட்டமிடப்பட்ட போராட்டங்கள் தொடர்பான பாதுகாப்பு கவலைகளை காரணம் காட்டி, கேம்பிரிட்ஜ் யூனியன் முன்னதாக நாமல் ராஜபக்சவின் உரையை ரத்து செய்வதாக அறிவித்திருந்தது.

மாணவர்கள் சுதந்திரமாக பங்கேற்கும் திறன் குறித்து கவலைகள் எழுந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒக்ஸ்போர்ட் யூனியன் தலைவர் கத்தரின் யாங் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச தற்போது பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் லண்டன் பௌத்த விஹாரையில் அவர் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.

ஜெனிவா கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் இன்று (23) ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.

எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இம் மாநாட்டில் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மதிப்பீடு செய்யப்படவுள்ளது.

குறிப்பாக இலங்கை மனித உரிமை நிலைவரம் மற்றும் பொறுப்புகூறல் பற்றியும் ஜெனிவா மாநாட்டில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

ஜெனிவாவுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி தலைமையிலான குழு மாநாட்டில் பங்கேற்கவுள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (23.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

லயன் குடியிருப்புக்குள் ஜனாதிபதியால் செல்ல முடியுமா? ஜீவன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்டக்கமிட்டி தலைவர்களுடனான கலந்துரையாடல் கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய மண்டபத்தில் நேற்று (22) நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் இ.தொ.கா பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், பிரதித் தலைவர்களான கணபதி கனகராஜ், அனுசியா சிவராஜா, போசகர் ஜெகதீஸ்வரன் உபத் தலைவர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், காரியாலய உத்தியோகஸ்தர்கள் மற்றும் தோட்டக்கமிட்டி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய ஜீவன் தொண்டமான்,

“தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் முன்னேற்றத்திற்கு இ.தொ.கா ஒருபோதும் எதிரானது அல்ல. யார் அரசாங்கத்திற்கு வந்தாலும், அவர்களின் நோக்கமும் செயற்பாடுகளும் மக்களுக்குச் சாதகமாக இருந்தால் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்றும், தவறுகள் இருந்தால் ஆலோசனைகளையே முன்வைப்போம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் லயன் குடியிருப்புக்குள், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் மாத்திரம் தனியாக சென்று, மக்களின் வாழ்வியலை ஜனாதிபதியால் அவதானிக்க முடியுமா?

இதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் நிறுவனங்களுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை பகிரங்கப்படுத்துமாறும்
அத்தோடு வேதன அதிகரிப்புக்குரிய உடன்படிக்கை பகிரங்கப்படுத்தப்படாமை சந்தேகத்தை ஏற்படுத்திள்ளது எனவும் தெரிவித்தார்.

பெருந்தோட்ட நிறுவனங்களுடன் செயற்பட்ட அனுபவம் இ.தொ.காவிற்கு நீண்ட காலமாக உள்ளதாகச் சுட்டிக்காட்டினார். கடந்த ஒரு வருடமாக பாராளுமன்றத்திலும், கட்சியிலும், மக்கள் மத்திலும் தாம் முன்னெடுத்த செயற்பாடுகளை அனைவரும் அறிவார்கள்.

2024 ஆம் ஆண்டு தாம் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் காணி உரிமைக்காக 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நிதிக்கு என்ன நடந்தது என்பதைக் கேள்வியெழுப்பியிருந்தேன், இன்று தற்காலிக தீர்வான சம்பள உயர்விற்காக அதே நிதி பயன்படுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

இதனை எடுத்துச் சொன்னால் இ.தொ.கா சம்பள உயர்விற்கு எதிரானது என தவறாக பிரச்சாரம் செய்கின்றார்கள்.

2020 ஆம் ஆண்டு 750 ரூபாவிலிருந்து 1,000 ரூபாவாகவும், 2024 ஆம் ஆண்டு 1,000 ரூபாவிலிருந்து 1,350 ரூபாவாகவும் அடிப்படை சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்தது இ.தொ.காவே. அன்று 2,138 ரூபா சம்பளம் வேண்டும் எனக் கூறியவர்கள், இன்று 1,750 ரூபாவை வெற்றியாகக் கூறுவது தொழிலாளர்களுக்கான துரோகம் இழைப்பதாக அமைந்துள்ளது.

மேலும், தோட்டத் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்பிற்காக,
2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தேன் என்பதனை ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்

ஜனாதிபதியிடம் மலையகம் தொடர்பான முழுமையான தகவல்கள் சரியாக கொண்டு செல்லப்படவில்லை என்பதே பிரச்சினையின் மூலக் காரணம், டித்வா புயலுக்குப் பின்னரான நிவாரண நடவடிக்கைகளையும் அதற்கான உதாரணமாக எடுத்துக்காட்டலாம்.

தற்போதைய அரசாங்கம் மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது, ஆளும் கட்சி மலையக பிரதிகள் அரசாங்கத்திற்குள் தலையாட்டி பொம்மைகளாக மட்டுமே உள்ளார்கள்.

தோட்டங்களில் தொழிலாளர்களின் வேலைக்கு தடையாக இருப்பது அரசாங்கமோ, அரசியல்வாதியோ, தொழிற்சங்கமோ அல்ல; பெருந்தோட்ட நிறுவனங்களே!, மலையக மக்களிடையே பிரிவினையை உருவாக்கியதும் அந்த நிறுவனங்களே என வலியுறுத்தினேன். இனி பிரிவினைகளை தள்ளி வைத்து, ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் அவர் கேட்டுக்கொண்டார்

சிம்பாப்வே அணியின் வெற்றிநடை தொடருமா? மேற்கிந்திய தீவுகளுடன் இன்று மோதல்!

ICC Men’s T20 World Cup தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று (23) முக்கியமான மோதல் நடைபெறுகிறது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாப்வே அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

இந்தப் போட்டி மும்பையில் உள்ள Wankhede Stadium மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகிறது.

நடைபெற்று வரும் உலகக்கிண்ண தொடரில் சிம்பாப்வே அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

முதல் சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

தன்னம்பிக்கையுடன் சூப்பர் 8 சுற்றை எட்டியுள்ள அந்த அணி, இன்று மேலும் ஒரு பெரிய வெற்றியை குறிவைத்து களமிறங்குகிறது.

மறுபுறத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும் அபாரமான நிலையில் உள்ளது. குழு சுற்றில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான அணியாக திகழ்கிறது. அவர்களின் துடுப்பாட்டமும் பந்துவீச்சும் சமநிலையுடன் அமைந்துள்ளது.

அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய இரு அணிகளும் தீவிரமாக போராடவுள்ளதால், ரசிகர்கள் பரபரப்பான மற்றும் சுவாரஸ்யமான போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் லண்டனில் களமிறங்கினார் நாமல்!

 

புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தமிழ் மாணவர் சங்கங்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு லண்டன் சென்றடைந்துள்ளார்.

லண்டன் பௌத்த விஹாரையின் 100ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அவர் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

முன்னதாக, பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் யூனியனில் நாமல் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த விசேட உரை, பாதுகாப்பு காரணங்கள் மற்றும் தமிழ் அமைப்புகளின் தொடர் போராட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக இரத்துச் செய்யப்பட்டது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கேம்பிரிட்ஜ் யூனியன், “தற்போதைய சூழலில் இருதரப்பு சமநிலையான விவாதத்தை முன்னெடுப்பது சாத்தியமில்லை” எனத் தெரிவித்திருந்தது.

கேம்பிரிட்ஜ் நிகழ்வு இரத்தான போதிலும், திட்டமிட்டபடி ஒக்ஸ்போர்ட் யூனியனில் அவர் ஆற்றவிருக்கும் உரையும், லண்டனில் வசிக்கும் இலங்கைச் சமூகத்துடனான சந்திப்புகளும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், ஒக்ஸ்போர்ட் யூனியன் உரையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

நாமலினுடைய இந்தப் பயணத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மற்றும் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர் மிலிந்த ராஜபக்ஷ ஆகியோரும் இணைந்து கொண்டுள்ளனர்.

மரக்கறி விலைப்பட்டியல் (22.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

என்.பி.பி. அரசுமீதான மக்கள் நம்பிக்கை குறையவில்லை!

மாகாணசபைத் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி   அரசாங்கம்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை நிச்சயம் வெளிபடும் என்பது உறுதி என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு அதிகரித்துள்ளது. மிகுந்த நம்பிக்கையுடனேயே இதனை நான் அறிவிக்கின்றேன்.

மாகாணசபைத் தேர்தலின்போது இது தெரியவரும். நிச்சயம் நாம் தேர்தலை நடத்துவோம். கிழக்கு மாகாணத்திலும் வெற்றிபெறுவோம்.

மாகாணசபைத் தேர்தலுக்குரிய உரிய ஏற்பாடுகள் நடந்த பின்னர் உரிய காலத்துக்குள் அது நடத்தப்படும்.” – என்றார்.

​வெல்லவாய – எல்ல பிரதான வீதியில் விபத்து: நால்வர் காயம்!

இரா. சுரேஷ்குமார் (தெமோதரை நிருபர்)

 

வெல்லவாய – எல்ல பிரதான வீதியின் 09ஆம் கட்டை தபால் நிலையத்திற்கு அருகில் இன்று (21) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் போலந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் நால்வர் காயமடைந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் பயணித்த வாகனம் வீதியோரத்தில் இருந்த மாமரம் ஒன்றில் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

​காயமடைந்தவர்களில் இரு ஆண்களும் இரு பெண்களும் அடங்குவர். இவர்கள் நால்வரும் உடனடியாக வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குச் சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு வங்கித் துறை தோள் கொடுக்க வேண்டும்

0
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

இலங்கை வருகிறார் இந்திய துணை ஜனாதிபதி!

0
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி சி....

புதன்கிழமை விடுமுறை இரத்து!

0
  "எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுகின்றது" என்று அத்தியாவசிய...