Home Blog Page 67

உக்ரைன், ரஷ்யாவுக்கிடையில் அடுத்தவாரம் அமைதிப் பேச்சு!

அமெரிக்கா மத்தியஸ்த முயற்சியின் கீழ், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையிலான முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை ஜெனீவாவில் எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நாட்களில் நடைபெறவுள்ளது.

இந்தத் தகவலை இரு தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளன.

அபுதாபி நகரில் அண்மையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த முன்னேற்றம் எட்டப்படவில்லை என வோலோடிமிர் ஸெலென்ஸ்கி அதிருப்தி தெரிவித்திருந்தார்.

சுமார் நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போர் நிலைக்கு வரும் ஜூன் மாதத்துக்குள் தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா இரு நாடுகளுக்கும் அழுத்தம் வழங்கியுள்ளது. இந்தப் பின்னணியிலேயே ஜெனீவா சந்திப்பு நடைபெறுகிறது.

அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும், களத்தில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கிழக்கு உக்ரைனில் ரஷியா மேற்கொண்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இலக்காகக் கொண்டு உக்ரைன் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஸெலென்ஸ்கி, அங்கு உக்ரைன்–ஜெர்மனி இணைந்து நிறுவியுள்ள ட்ரோன் உற்பத்தி ஆலையை பார்வையிட்டுள்ளார்.

ஜெனீவா பேச்சுவார்த்தை, நீண்டகாலமாக நீடிக்கும் இந்த இரத்தச் சண்டைக்கு முடிவுக் கட்டுமா என்ற கேள்வி உலக கவனத்தை ஈர்த்துள்ளது.

நாடாளுமன்றத்தை கொளுத்த முற்பட்டவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை அவசியம்!

அரகலயவின்போது நாடாளுமன்றத்தைக் கொளுத்துவதற்கு வந்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,

“நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவை கொலை செய்த நபர்களுக்கு தண்டனை கிடைக்கப்பெற்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. ஏனெனில் காட்டாட்சிக்கு இடமளிக்க கூடாது. நாட்டில் சட்டம் அமுலாக வேண்டும்.

நாடாளுமன்றத்தைக் கொளுத்துவதற்கும் நபர்கள் வந்தனர். சிலர் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். அவர்களுக்கு எதிராகவும் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஆட்சியின்கீழ் அது நடக்குமா என்பது சந்தேகமே;.” – என்றார் எஸ்.எம். மரிக்கார்.

இரட்டைக் கொலை: விசாரணைக்கு 10 பொலிஸ் குழுக்கள்!

தென்னிலங்கையை அதிர்ச்சியில் ஆழ்த்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சட்டத்தரணியும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ள நிலையில், விசாரணை வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அக்குரேகொட பகுதியில் நேற்று (13) மாலை சுமார் 5 மணியளவில் இந்த கொடூரச் சம்பவம் இடம்பெற்றது.

பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன தரிப்பிடத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் வாகனத்தில் இருந்த சட்டத்தரணியையும் அவரது மனைவியையும் குறிவைத்து, காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிச்சென்றுள்ளனர்.

இந்த இரட்டைக் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை விரைவாக கைது செய்யும் நோக்கில் 10 விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அதேவேளை, சிஐடியினரும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கொழும்பில் நாளை அவசர விசேட கூட்டமொன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

சட்டத்துறையினர் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்ளிட்ட விடயங்கள் இதில் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 14 வருடங்களுக்கு பிறகே சட்டத்தரணிகளால் அவசர கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

உயிரிழந்த சட்டத்தரணிக்கு 44 வயதெனவும், அவரது மனைவிக்கு 43 வயதெனவும் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில் பாதாள குழு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

அறகலயவுக்கு வெளிநாட்டிலிருந்து பணம்: எங்கள் ஆட்சியில் விசாரணை உறுதி!

“அறகலய தொடர்பிலும், அதற்காக வெளிநாடுகளில் இருந்து வந்த பணம் மற்றும் பின்புலம் தொடர்பில் எமது ஆட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மறுபுறத்தில் தாம் கூறியது பொய் என்பது அம்பலமாகி வருகின்றது.

ஆளுங்கட்சிக்குள் நடக்கும் ஊழல்களும் வெளிவருகின்றன. எனவே, தமது இருப்பைக்காக்க அரசாங்கம் அடக்குமுறையை பயன்படுத்துகின்றது.

இந்த அடக்குமுறைக்கு அஞ்சி நாம் மௌனம் காக்க வேண்டும் என கருதியே அரசாங்கம் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுகின்றது. ஆனால் அவர்களின் எண்ணம் ஈடேறாது. நாட்டு மக்களுக்காக நாம் முன்னிலையாவோம்.

1988 காலம் முதலே தமது அரசியலுக்காக இளைஞர்களின் உயிரை ஜே.வி.பி. பயன்படுத்திவருகின்றது. அறகலய காலத்திலும் அது நடந்தது. இளைஞர்கள் இன்று தண்டனை எதிர்கொள்கின்றனர். அவர்கள் (ஜே.வி.பி.) ஆட்சிக்கு வந்துள்ளனர்.

அறகலய மற்றும் அதற்காக வெளிநாடுகளில் இருந்து வந்த நிதி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு எமது ஆட்சியில் விசாரணை நடத்தப்படும்.” – என்றார்.

மலையகத்தில் ஆரோக்கியமான அரசியல் மாற்றம் அவசியம்: இணைந்து பயணிப்போம் வாருங்கள்!

“மலையக மக்களுக்கான அபிவிருத்தியில் ஒரே பாதையில் பயணிப்பதற்கு மலையக அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும். ஒருவரையொருவர் குறைகூறிக்கொள்வது நிறுத்தப்பட வேண்டும்.
மலையகத்தில் ஆரோக்கியமான அரசியல் மாற்றம் அவசியம்.”

இவ்வாறு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

சூரியன் விழுதுகள் அரசியல் நிகழ்ச்சியின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ மக்களின் அபிவிருத்தி தொடர்பில் ஒன்றாக பயணிப்போம் என மலையக அரசியல் தலைவர்களுக்கு நாம் அழைப்பு விடுத்திருந்தோம்.

ஏனைய சமூகத்திpனர் பொருளாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்தியில் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.
மலையக அரசியல்வாதிகள்மீது எமக்கு தனிப்பட்ட கோபம் கிடையாது. காழ்புணர்ச்சியும் கிடையாது.

எனவே, ஒருவரையொருவர் குற்றச்சாட்டுவதை விடுத்து மக்களுக்கான அபிவிருத்தியில் ஒரு பாதையில் பயணிப்போம். ஏனெனில் மக்கள்தான் கடையில் எல்லாவற்றையும் தீர்மானிப்பார்கள். மக்களின் முன்னேற்றம்தான் எமக்கு முக்கியம்.

எதிரணியில் இருந்து எமக்கு ஆலோசனை வழங்கலாம். நாம் எதிரும், புதிரும் ஆனவர்கள் அல்லர். நட்புடன் பயணிக்கலாம். ஆரோக்கியமான அரசியல் மாற்றம் அவசியம்.” எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்றைய ஆட்டங்கள்!

ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 3 முக்கிய லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

கொழும்பில் Colombo (SSC) மைதானத்தி காலை 11 மணிக்கு தொடங்கும் போட்டியில் அயர்லாந்து மற்றும் ஓமான் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் தங்களின் பிரிவில் முன்னேற்றம் பெற இந்தப் போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்குகின்றன.

அதேபோல், கொல்கத்தாவில் மதியம் 3 மணிக்கு தொடங்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.

இதனைத் தொடர்ந்து, இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தோட்ட தொழிலாளியை பங்காளியா மாற்றும் சிஸ்டம் சேஞ்ச் அவசியம்!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,

“சம்பள உயர்வு வழங்கிய” பிரசிடெண்ட் AKD, மலை மேல ஏறி, உழைக்கும் பெண்ணின் கரங்கள பிடிச்சு நம்பிக்கை தருகிறார். நல்ல விஷயம்!!!

மேலதிக ஒரு கிலோவுக்கு ரூவா 50/= என்பது ஏற்கனவே இருக்கிற சிஸ்டம்தான். ஆகவே இதையும் மீறி சம்பள உயர்வு கிடைச்சா அத மனம் விட்டு பாராட்டனும். ஆகவே பொறுமையுடன் வரவேற்போம்.

இதை விட, தொழிலாளியை, பங்காளியா மாற்றும், தொழில் துறை மாற்றம், “சிஸ்டம் செஞ்ச்” கொண்டு வரனும் என்பது தான் எங்க #TPA கொள்கை!

மற்றபடி, இங்கே நான் சொல்ல வாற விஷயம்,“காணி உரிமை” என்பதாகும். “சம்பளம்” என்பதை விட “காணி உரிமை” பிரதான விஷயம் என்று நான் சொல்லி திரிகிறேன்.

அதை ஏன் தர மறுக்கிறீங்க மிஸ்டர் பிரசிடெண்ட்? என்று கேட்டால் செக்ரட்டரியட்டில் இருந்து பதில் இல்லை. ஆகவே அதை நான் சர்வதேச சமூகத்திடம் மீண்டும், மீண்டும் கூறுகிறேன்.

“மிஸ்டர் ManoG, அது பற்றி எல்லாம் நீங்க கவலை படாதீங்க. அத நாம பார்த்து கொள்கிறம். நீங்க சும்மா இருந்தாலே போதும். நம்ம ஜனாதிபதி AKD, நிச்சயமா காணி தருவார்” எ‌ன்று இதற்கு, AKD ஆதரவாளர்கள் பதில் கூறுறாங்க.

இத கேட்டு நான் கோபம், கவலை எதுவுமே அடையல. ஏனெனில், “இது நல்ல ஒரு பதில்.”! இந்த பதில் எனக்கு மறக்காது. எனக்கு பதில் சொல்பவர்கள், அடுத்த வருஷம் வரையாவது, ஞாபகம் வைச்சு கொள்வது நல்லது!
(பின் குறிப்பு)

பொறுப்பில் உள்ள மலையக அமைச்சர்கள் எவருமே, இப்படி நெஞ்சை நிமிர்த்தி பதில் சொல்லல. AKDயின் பாமர ஆதரவாளர்கள் தான் இப்படி ஆர்வ மிகுதியில், சொல்றாங்க.

இன்னும் சிலர், ஆர்வ கோளாறு அதிகமாகி, “நீங்க ஆட்சியில் இருந்த போது ஒரு மண்ணும் பண்ணலையே” என்று சமூக ஊடகங்களில் கூலிக்கு கூவுறார்கள். நாம் நான்கு (4) வருஷமே ஆட்சியில் இருந்தோம். இதுவே பலருக்கு தெரியாது.

இவர்கள் வரலாற்றில் தேடி பார்க்க வேண்டும். அந்த நாலே வருஷத்தில, மலை நாட்டில், “7-பேர்ச் காணி, தனி வீடு, 10,000-இந்திய உதவி வீடமைப்பு திட்டம்” ஆகியவற்றை அமைச்சரவை தீர்மானமாக, பாராளுமன்ற சட்டமாக, அரசாங்க கொள்கையாக, புரிந்துணர்வு ஒப்பந்தமாக, கொண்டு வந்ததே, நாம்தான்!
மனோ_கணேசன்

மரக்கறி விலைப்பட்டியல் (14.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

இந்தியப் பயணத்தை முடித்து நாடு திரும்பியது ஜே.வி.பி.குழு!

ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் இந்தியப் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளனர்.

இந்திய கலாசார உறவுகள் பேரவையின் சிறப்பு பார்வையாளர்கள் திட்டத்தின் கீழ், ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் பெப்ரவரி 5 ஆம் திகதி தொடக்கம், 12,ஆம் திகதி வரை இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

இது ரில்வின் சில்வாவின் முதலாவது இந்திய பயணமாகும்.

அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜ் மற்றும் இளங்குமரன் ஆகியோரும், ஹேமதிலக கமகே மற்றும் கல்பனா மதுபாஷினி உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளும் இந்தப் பயணத்தில் இணைந்திருந்தனர்.

ஜேவிபி குழுவினர், புதுடெல்லி, அகமதாபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்குச் சென்று, உயர் மட்டக் கூட்டங்கள் மற்றும் நிறுவன பார்வையிடல்களில் பங்கேற்றது.

புதுடெல்லியில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பவன் கபூர் ஆகியோரைச் சந்தித்தனர்.

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வை மகாசாகர் திட்டத்தின் கீழ் நம்பகமான பங்காளியாக சிறிலங்காவுக்கு இந்தியா அளித்த உறுதிப்பாட்டை இந்தியத் தரப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.

பகிரப்பட்ட வளர்ச்சி வாய்ப்புகள், சமூக நல முயற்சிகள் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட மேம்பாடு குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

புதுடெல்லியில் இந்தியாவின் தனித்துவமான டிஜிட்டல் அடையாள ஆணையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், கதி சக்தி முயற்சி மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்குச் சென்ற ரில்வின் சில்வா குழுவினருக்கு, டிஜிட்டல் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிலையான விவசாயம் ஆகியவற்றில் இந்தியாவின் திறன்கள் பற்றி விளக்கப்பட்டது.

அகமதாபாத்தில், ஜேவிபி குழுவினர், குஜராத் முதல்வர் பூபேந்திர படேலையும், துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவியையும் சந்தித்தனர்.

பால் பண்ணை, உள்கட்டமைப்பு, கூட்டுறவு, நிதி தொழில்நுட்பம், சுற்றுலா, புதுமை மற்றும் தொழில்முனைவோர் போன்ற துறைகளில் குஜராத்தின் உள்ளடக்கிய வளர்ச்சி மாதிரிகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

திருவனந்தபுரத்தில், ரில்வின் சில்வா குழுவினர் கேரள முதலமைச்சர் பினராய் விஜயனைச் சந்தித்ததுடன், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கும், பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் வசதியான விழிஞ்சம் ஆழ்கடல் கொள்கலன் துறைமுகத்திற்கும் சென்று பார்வையிட்டனர்.

ரில்வின் சில்வா தலைமையிலான ஜேவிபி குழுவின் பயணம் இருதரப்பு புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், சிறிலங்காவில் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட அரசியல் தலைமையுடன் இந்தியாவின் தொடர்ச்சியான ஈடுபாட்டை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் களமிறங்கியது இந்திய அணி: பாகிஸ்தானுடன் நாளை மோதல்!

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் மிகப்பெரிய மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோதல் நாளை (15) கொழும்பில் நடைபெறவுள்ளது.

உலக கிரிக்கெட் ரசிகர்களின் முழு கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இந்த மாபெரும் போட்டியின் மீது திரும்பியுள்ளது.

இந்த பரபரப்பான ‘கிரிக்கெட் போர்’ கொழும்பிலுள்ள ஆர். பிரேமதாச மைதானம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

இந்த போட்டியில் பங்கேற்கமாட்டோம் என முன்பு பாகிஸ்தான் அறிவித்திருந்தது. இதனால் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இலங்கை மேற்கொண்ட தீவிர இராஜதந்திர முயற்சிகளின் பின்னர், பாகிஸ்தான் அணி இறுதியில் சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்தியா–பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான அரசியல் பதற்றம் காரணமாக, இரு அணிகளின் மோதல் எப்போதும் சாதாரண போட்டியாக இல்லாமல், ஒரு பெரும் கௌரவப் போராட்டமாகவே பார்க்கப்படுகிறது. மைதானத்தில் ஒவ்வொரு பந்தும், ஒவ்வொரு ஓட்டமும் ரசிகர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கப்போகிறது.

நாளைய மோதல் வெறும் கிரிக்கெட் போட்டி அல்ல — அது பெருமை, மரியாதை, ஆதிக்கம் ஆகியவற்றை நிரூபிக்கும் மாபெரும் போராட்டமாக அமையவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

38 நாள்கள் தூங்கிய அரசை தீப்பந்தம் ஏந்தி எழுப்பினோம்

0
"கடந்த 38 நாள்களாக ஆழ்தூக்கத்தில் இருந்த அரசாங்கத்தை எதிர்க்கட்சியின் தொடர் போராட்டங்களே விழிக்கச் செய்துள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் 'டித்வா' புயல் நிவாரணத்தைப் போல வெறும் காகித அளவிலான பொய் வாக்குறுதிகளாக அமைந்துவிடக் கூடாது"...

போரில் 9 விமானங்களை இழந்துள்ள அமெரிக்கா!

0
ஈரான்மீதான போர் நடவடிக்கை ஆரம்பமானது முதல் போர் விமானம் உட்பட 9 விமானங்களை அமெரிக்கா இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் விமானம், எரிபொருள் நிரப்பு விமானம், போக்குவரத்து விமானம் என்பனவே இதுவரை இழக்கப்பட்டுள்ளன. கடந்த பெப்ரவரி...

அமரர் கே. வேலாயுதம் – மலையகத்தின் குரலாய் ஒலித்த கொள்கைவாதி!

0
மலையகத் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்காகவும், நலனுக்காகவும் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமரர் கே. வேலாயுதம் அவர்களின் 76ஆவது ஜனன தினம் நேற்று (06) அனுஷ்டிக்கப்பட்டது. கல்வி,...