Home Blog Page 845

பிரபாகரனுடனேயே மோதியவன் நான் – சஜித்துக்கு எதிராக பொன்சேகா அரசியல் போர் தொடுப்பு

” பிரபாகரனுடனேயே மோதியவன் நான், ஆக மோதல்களை எதிர்கொள்வதும், சவால்களை சந்திப்பதும் எனக்கு புதியவிடயமல்ல. கட்சி சட்டப்பூர்வமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தால் அதனை எதிர்கொள்ள தயார்.” – என்று சூளுரைத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், அக்கட்சியின் தவிசாளர் பொன்சேகாவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்கவை கட்சியில் இணைத்துள்ளமையே இம்மோதலுக்கு காரணம்.

இந்நிலையிலேயே பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“சலுகைகளை அனுபவிப்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை.அரசியலுக்கு வந்திருக்காவிட்டால்தான் எனக்கு சலுகைகள் வழங்கப்பட்டிருக்கும். அமைச்சு செயலாளர் பதவிக்கூட வழங்க தயாராக இருந்தனர்.

ஆனாலும் நான் அவற்றை ஏற்கவில்லை. சலுகைகளுக்கு அடிபணிந்து சோரம்போக தயாரில்லை என்பதால்தான் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரசியலுக்கு வந்தேன்.
அன்று ராஜபக்சக்களுடன் மோதுவதற்கு எனக்கு முதுகெலும்பு இருந்தது. எனவே, தவறுகள் இடம்பெறும்போது மௌனம் காக்க முடியாது. அதற்கு எதிராக பொங்கியெழுந்துதான் பழக்கம்.

சரத்பொன்சேகா என்பவர் பிரபாகரனுடனேயே மோதியவர், அதன்பின்னர் கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ஆகியோருடனும் மோதியுள்ளேன். எனவே, மோதல், சவால்களை எதிர்கொள்ளல் என்பனவெல்லாம் எனக்கு புதிதல்ல. நான் மாறப்போவதில்லை. இனி மாறவும் முடியாது. தூய்மையான வழியில் எனது கொள்கையின் பிரகாரம் அரசியலை முன்னெடுப்பேன்.

சட்டப்பூர்வமாக கட்சியால் முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு முகங்கொடுப்பேன்.
தயாரத்னாயக்கவை கட்சியில் இணைத்துக்கொண்டமை தவறு. கட்சியில் கலந்துரையாடாமல் எடுக்கப்பட்ட முடிவு அது. அதனால்தான் கட்சிக்குள் அல்லாமல் பொதுவெளியில் விமர்சிக்கின்றேன்.” – என்றார்.

யார் இந்த ஜகத் பிரியங்கர?

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக ஜகத் பிரியங்கர இன்று (08) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய புத்தளம் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் மறைவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு ஜகத் பிரியங்கர இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

1979 இல் பிறந்த ஜகத் பிரியங்கர திக்வல்லை அரச பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், இரண்டாம் நிலைக் கல்வியை வென்னப்புவ ஜோசப் வாஸ் மத்திய கல்லூரியிலும் நிறைவு செய்துள்ளார். அவர் களனிப் பல்கலைக்கழகத்தின் இளங்களைப் பட்டதாரியுமாவார்.

2015 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ஜகத் பிரியங்கர 31,424 விருப்பு வாக்குகளைப் பெற்று மாவட்டத்தில் ஐந்தாவதாகத் தெரிவானார்.

மீண்டும் 2017 இல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர் அதில் உள்ளூராட்சிமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார். 2020 இல் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு 40,724 வாக்குகளைப் பெற்று மாவட்டத்தில் ஆறாவதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

சமுர்த்தி முகாமையாளரான ஜகத் பிரியங்கர, சமுர்த்தி தேசிய அமைப்பு மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளருமாவார். இவர் தினமின, லங்காதீப மற்றும் மவ்பிம ஆகிய பத்திரிகைகளில் ஊடகாவியலாளராகவும், சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளராகவும் செயற்பட்ட மறைந்த எல்.கே. சாம்சன் ஜயந்தவின் புதல்வராவார்.

2007 இல் எம்.வீ. தேதுனுவை மணந்த ஜகத் பிரியங்கர மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

28 வயது பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் – ஆண் வைத்தியர் கைது!

கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட மாவனல்ல, அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் சேவையாற்றும் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் வைத்தியர் ஒருவர் அரநாயக்க பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் சேவையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியர் ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் குறித்த பெண் வைத்தியரின் தந்தை கேகாலை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்ததனையடுத்தே, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் சேவையாற்றும் திருமணமான 45 வயது வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வைத்தியர் இடமாற்றம் பெற்று கடந்த 5 ஆம் திகதியே அரநாயக்க வைத்தியசாலைக்கு வந்துள்ளார் என தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரிடமும் சம்பவம் இடம்பெற்றபோது கடமையிலிருந்த ஐவரிடமும் வாக்குமூலங்களை பொலிஸார் பதிவுசெய்துள்ளனர். சம்பவத்திற்கு முகம் கொடுத்த பெண் வைத்தியர் கேகாலை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யுக்திய ஒப்பரேஷன் – மேலும் 728 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது மேலும்; 728 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 558 சந்தேக நபர்களும் ஏனைய குற்றங்கள் தொடர்பில் 170 சந்தேக நபர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 14 சந்தேக நபர்கள் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 170 சந்தேக நபர்களில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 18 சந்தேக நபர்களும் ஏனைய குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 145 சந்தேக நபர்களும் திறந்த பிடியாணை பெற்றவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 122 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் , 101 கிராம் ஐஸ் போதைப்பொருள் , 5 கிலோகிராம் 217 கிராம் கஞ்சா , 23,521 கஞ்சா செடிகள், 404 கிராம் மாவா , 1,852 போதை மாத்திரைகள், 171 கிராம் மதன மோதகம் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வாக்காளர் இடாப்பு – தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவித்தல்

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில், தாமதமின்றி பெயர்களை பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் பெயர்களைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு வீட்டிலிருந்து சமர்ப்பிக்கப்படும் வாக்காளர் பட்டியலில் 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவருடையதும் அல்லது வீட்டில் தங்கியுள்ள அனைவரினதும் தகவல்களை உள்ளடக்குவது கட்டாயமென அவர் கூறியுள்ளார்.

நிரந்தர வதிவிடத்தை மாற்றாது, திருமணம், கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வசிப்பிடத்தை மாற்றிய அனைவரும் வாக்காளர் இடாப்பில் தமது பெயரை பதிவு செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு வாக்களிக்க முடியாவிட்டாலும் அவர்களது பெயர்களும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

13 ஐ எதிர்த்ததற்காக ஜே.வி.பி. மன்னிப்பு கோர வேண்டும்!

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அன்று எதிர்த்ததற்காக ஜே.வி.பியினர் இன்று மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய பயணம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஜே.வி.பியினர் ஜனநாயக வழியில் பயணிப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. ஆனால் அவர்கள் கார்த்திகை வீரர்கள் தினத்தை அனுஷ்டிப்பதை அனுமதிக்க முடியாது. அத்துடன், 70 காலப்பகுதியில் உயிரிழந்தவர்களுக்காக அவர்கள் மேயில் நினைவேந்தல் நடத்துகின்றனர். இதையும் ஏற்கமுடியாது.

இன்று ஜே.வி.பியினர் இந்தியா சென்றுள்ளனர், நல்லவிடயம். ஆனால் அன்று இந்தியாவில் இருந்து மருந்து, பருப்பு கொண்டுவந்தவர்களையெல்லாம் ஜே.வி.பியினர் கொலை செய்தனர். இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்தனர். மாகாணசபை முறைமைக்கு போர்க்கொடி தூக்கினர். இலங்கை – இந்திய ஒப்பந்தம்தான் இந்தியாவின் அடிப்படை காரணி. ஆக தற்போதைய சந்திப்பில் இது பற்றி பேசப்படாமல் இருக்குமா என்ன?

எனவே, இந்திய எதிர்ப்பு கொள்கை உட்பட தாம் அன்று செய்தது தவறு என்பதை ஏற்று அது தொடர்பில் ஜே.வி.பியினர் தெளிவான அறிவிப்பொன்றை வெளியிடவேண்டும். தன்னால் வெள்ளை இனத்தவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக உண்மையை கண்டறியும் ஆணைக்குழு முன்னிலையில் நெல்சன் மண்டேலா மன்னிப்பு கோரினார். அதுபோல ஜே.வி.பியினரும் மன்னிப்பு கோர வேண்டும்.” – என்றார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கும், உளவு பார்த்தவருக்கும் நஞ்சு கலந்த பால் – நடந்தது என்ன?

கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர்கள் இருவருக்கு பொலிஸ் நிலையத்தில் வைத்தே நஞ்சு கலந்த பால் வழங்கப்பட்டுள்ள நிலையில், இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கொழும்பு, ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவர் , அவர்களை பார்வையிடவந்தார் எனக் கூறப்படும் நபர் வழங்கிய நஞ்சு கலந்த பால் பொதிகளை அருந்தி ஆபத்தான நிலையில் வைத்தி யசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற ஜிந்துப்பிட்டிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என அடையாளம் காணப்பட்ட நபர், அதற்காக உளவு தகவல் வழங்கிய நபர் ஆகியோரே இவ்வாறு ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு வழங்கப்பட்ட பால் பக்கட்டை வழங்கிய பின்னர் அருந்திய கைதிகளில் ஒருவர் உடனடியாக மயங்கி வீழ்ந்துள்ளார்.

சற்று நேரத்தில் மற்றவரும் மயங்கி வீழ்ந்துள்ளார். அதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும் தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவர்கள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பால் பாக்கெட்டுகளை கொண்டு வந்தவர் எனக் கூறப்படும் நபர் குறித்த தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவ ரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் எடுத்துவருகின்றனர்.

ம.ம.முவின் தேசிய மாநாட்டை ஏப்ரல் 26,27 ஆம் திகதிகளில் நடத்த திட்டம்

மலையக மக்கள் முன்னணியின் தேசிய மாநாடும் 35 ஆண்டு நிறைவு விழாவும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26, 27 ஆம் திகதிகளில் நுவரெலியாவில் அல்லது ஹட்டனில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தள்ளார்.

இது தொடர்பான கட்சியின் கலந்துரையாடல் கூட்டம் ஒன்று அண்மையில் இடம்பெற்றதாகவும் இதன்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்கள் முன்னணி 1989 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் மறைந்த தலைவர் பெரியசாமி சந்திரசேகரனால் ஸ்தாபிக்கப்பட்டது.

மலையக தேசியம் மற்றும் உரிமை அரசியலுக்காக ஆரம்பிக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணியை ஆரம்பத்திலேயே ஒரம் கட்டிவிட வேண்டும் என பலரும் செயற்பட்டு வந்த நிலையில் தனது விடாமுயற்சியின் பயனாகவும் அன்று அவருடன் இணைந்திருந்த இளைஞர்களின் துடிப்பான செயற்பாடுகளாலும் மலையகத்தின் ஒரு மாற்று கட்சியாக உருவெடுத்தது.

யாரும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்த மலையக மக்கள் முன்னணி இலங்கை அரசியல் வரலாற்றில் 1994 ஆம் ஆண்டு ஒரு அரசாங்கத்தை தீர்மானிக்கின்ற சக்தியாக அது தன்னை அரசியலில் வளர்த்துக் கொண்டது.

“ நான் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்பு அமரர் சந்திரசேகரனின் வழியில் இந்த கட்சிக்கு தலைமைதாங்கி பல வெற்றிகளை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. எனவே மலையக மக்கள் முன்னணிக்கு என ஒரு சரித்திரம் இருக்கின்றது.கடந்த பல வருடங்களாக மாநாட்டை நடத்த முடியாத நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள மாநட்டை மிகவும் சிறப்பாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.” என்று இராதாகிருஸ்ணன் குறிப்பிடுகின்றார்.

மேலும் இந்த மாநட்டில் இந்தியா மலேசியா சிங்கப்பூர் உட்பட பல நாடகளில் இருந்தும் முக்கியஸ்தர்கள் பங்கெடுக்கவுள்ளனர்.குறிப்பாக இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து மேடைப் பேச்சாளர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இதன்போது மலையக மக்கள் முன்னணிக்காகவும் அதன் முன்னேற்றத்திற்காகவும் செயற்பட்டவர்கள் அத்துடன் மலையகத்திற்கு பெருமை சேர்த்தவர்கள் என பலரும் கௌரவிக்கப்படவுள்ளனர்.இந்த மாநாடானது மலையக மக்கள் முன்னணியின் ஒரு மைகல்கல்லாக அமையும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு – பொன்சேகா ஐ.தே.கவில் இணைவு?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் சுமார் 20 நிமிடங்கள்வரை நடைபெற்ற இச்சந்திப்பின்போது சமகால விவகாரங்கள் பற்றி பேசப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் சபையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர். எனினும், பொன்சேகா சபையில் இருந்து ஜனாதிபதியின் உரையை செவிமடுத்தார்.

அத்துடன், பொன்சேகாவுக்கும், சஜித்துக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும், ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு விலகபோவதில்லை என பொன்சேகா அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

படம் – கோப்பு படம்

போதைப்பொருள் பாவனை: கைதான பல்கலை மாணவனுக்கு பிணை!

போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் நேற்று (07) சரீரப் பிணையில் விடுவித்து உத்தரவிட்டது.

வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவனொருவர் வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை தாக்கியதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியப் பணிமனையில் முறைப்பாடளித்து விட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது குறித்த நபர் போதைப்பொருள் பயன்படுத்தியமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதியாகியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் குறித்த மாணவனை கைது செய்த வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்று; குறித்த நபரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதவான் குறித்த நபரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
பல்கலைக்கழக மாணவர் என்ற அடிப்படையில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குறித்த நபரை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பாது தொடர்ச்சியாக கண்காணிக்கவும் உளவள ஆலோசனைக்கும் சமூக சீர்திருத்த நன்னடத்தை பிரிவுக்கு மல்லாகம் நீதவான் எம்.கே.முகமட் கில்மி உத்தரவிட்டார்.

சினிமா

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

செய்தி

தமிழ்த் தேசியப் பேரவை தயாரித்த ஆவணத்தில் தமிழரசுக் கட்சி ஒப்பமிடாது!

0
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு அனுப்ப என்ற பெயரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட்ட தமிழ்த் தேசியப் பேரவை தயாரித்த கடிதத்தில் ஆவணத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஒப்பமிடாது. தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி...

வடக்கில் 70 இற்கு மேற்பட்ட பாடசாலைகள் மூடப்படலாம்!

0
கல்வி பின்புலம் என்பது யாழ்பாணத்துக்கு தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாகும். தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாக இருந்த போதும் இன்று கல்வி பாரிய சவாலுக்கு உட்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்...

சமஷ்டியை வலியுறுத்தி போராட்டம்

0
இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி திருகோணமலை - வெருகல், பூநகர் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனை...