மருத்துவத்துறைக்குத் தடம் பதிக்கும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு!

​தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் (G.C.E. A/L) சித்தியடைந்து, மருத்துவ பீடத்துக்கு (Medical Faculty) நுழையத் தகுதி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

​இந்த பாடசாலையின் பழைய மாணவியும், கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரியுமான (MOH) ரெஷ்னி துரைராஜ் முன்னின்று ஏற்பாடு செய்திருந்தார்.

​நிகழ்வில்
​பிரபாகரன் கபிஷன் – தலவாக்கலை

​சித்திரவேல் அனுஜா – கிரேட் வெஸ்டர்ன் (Great Western) தோட்ட வரலாற்றில் மருத்துவத் துறைக்குத் தகுதி பெற்ற முதல் மாணவி!

​விஜயகுமார் அனிதா – லோகி (Logie) தோட்ட வரலாற்றில் இந்தச் சாதனையைப் படைத்த முதல் மாணவி! ஆகியோரே கௌரவிக்கப்பட்டனர்.

​கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வைத்தியர் ரெஷ்னி துரைராஜ், கோட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி கே. சுதர்சன் மற்றும் லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணவர்தன ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி கௌரவித்தனர்.

​”தடைகளை உடைத்து, மலையகத்தில் இருந்து மருத்துவக் கனவை நனவாக்கியுள்ள இந்த மாணவர்கள், எமது சமூகத்திற்குப் பெரும் முன்னுதாரணம்!”

​எமது மண்ணின் இளம் மருத்துவப் போராளிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! உங்கள் சேவை இந்தச் சமூகத்திற்கு மேன்மேலும் கிடைக்கட்டும்

கௌசல்யா.

Related Articles

Latest Articles