‘ஊரடங்கு தளர்வு – மலையக நகரங்கள் திறப்பு – கண்காணிப்பு தீவிரம் ( photos)

நாட்டில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று காலை 4 மணியுடன் தளர்த்தப்பட்ட நிலையில், மலையக பகுதிகளிலுள்ள நகரங்களின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியது.

கம்பளை, புஸல்லாவை, நுவரெலியா, ஹட்டன், பதுளை உட்பட பெருந்தோட்டங்களை அண்டியுள்ள நகரங்களிலுள்ள அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான கடைகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டாலும் ஒரு சில இடங்களில் அவை மீறப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுமார் 42 நாட்களுக்கு பிறகு தோட்ட பகுதிகளுக்கான பொது போக்குவரத்து சேவையும் இன்று இடம்பெற்றது.

அதேவேளை, பொலிஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். சுகாதார அதிகாரிகளும் பரிசோதனை நடவடிக்கையை முன்னெடுத்துவருகின்றனர்.

தொழில் மற்றும் அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் மட்டும் நகரப்பகுதிகளுக்கு வாருங்கள், அவ்வாறு வரும்போது முழுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles