கொரோனா வைரஸ் தொற்றிய நபரொருவர் தப்பியோடியுள்ளார்.
கட்டுநாயக்க – வலனாகொட பகுதியில் தங்கியிருந்த இவரை, கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவேளையிலேயே தப்பியோடியுள்ளார்.
பதவிய போகஹபிட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். அவரை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.










