நாடு ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்கிறது. எனினும் ஏனைய வளமான நாடுகளைப் போன்று உபரியை நாட்டில் உருவாக்குவதே இறுதி இலக்காகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பில் இன்று நடைபெற்ற 32ஆவது இன்டராக்ட் மாவட்ட மாநாட்டில் உரையாற்றும் போது தெரிவித்தார். இந்த இலக்கை அடைய 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்கான 25 வருட திட்டத்துடன் அனைவரும் கைகோர்க்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்










