நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெல்சி தோட்டத்தில் நேற்றிரவு லொறியொன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
கெல்சி தோட்டத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையொருவரே (வயது – 21) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை நானுஓயா பொலிஸ் கொண்டு வருகின்றனர்.
டி சந்ரு
