பதுளை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுக்கூட்டம்,(இன்று) பதுளை அரச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தொழில் அமைச்சர் நிமால் டி சிரிபால டி சில்வா மற்றும் ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில் ஆகியோரின் இணைத்தலைமைகளில் மேற்படிக் கூட்டம் நடைபெற்றது.
பதுளை மாவட்டத்தின் பெருந்தோட்டங்கள் மற்றும் கிராமியப் பகுதிகள் அபிவிருத்திகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அ. அரவிந்தகுமார், டிலான் பெரேரா, சுதர்சன தெனிப்பிட்டிய, சாமர சம்பத் தசாநாயக்க, திஸ்ச குட்டியாராச்சி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் பதுளை மாவட்ட அனைத்து அரச திணைக்கள பணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் ஆகியோரும், இக் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தனர்.
எம். செல்வராஜா, பதுளை










