பேரவலம்! மண்ணெண்ணெய் வாங்க 5 மணிநேரம் வரிசையில் நின்றவர் மயங்கி விழுந்து மரணம்!! வீடியோ

கண்டியில் கொட்டும் மழைக்கு மத்தியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

வத்தேகம – உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மயங்கி வீழ்ந்தவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவர் உயிரிழந்திருந்ததாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

இவர் சுமார் 5 மணிநேரம் வரிசையில் காத்திருந்தார் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles