எஸ்.பி.பியின் உடல்நிலை சீராக உள்ளது – வைத்தியசாலை நிர்வாகம்

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர வேண்டும் அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து வைத்தியசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது.உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவக்குழுவின் தொடர் கண்காணிப்பில் உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles