கம்பளை பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கம்பளை, கம்பளவத்த பிரதேசத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கும், ஆண்டியாகடவத்த பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
24 வயதுடைய இளைஞன், கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடையில் வேலைசெய்துள்ளார். இவரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனை முடிவுகள் நேற்று (31) வெளியாகின. இதில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆண்டியாகடவத்த பகுதி தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றாளர்கள் இருவரும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
மேற்படி இரு பகுதிகளிலும் 4 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடமும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
கம்பளை நிருபர் – லாவண்யா
