கலஹா குரூப் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். எனினும், இவர்களுக்கு வரும் – அனுப்படும் கடிதங்கள், முக்கிய ஆவணங்கள் வீடுகளுக்கு வராமல், கலஹா காரியாலத்திலேயே தேங்கி – குவிந்து கிடப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தோட்டத்துக்கு பொறுப்பான நபர் ஒருவர் ஊடாக கடிதங்கள் எடுத்துச்செல்லப்பட்டாலும் அவை உரிய முறையில் மக்களிடம் சென்றடையாமல் மீண்டும் திருப்பி அனுப்பும் நிலைக்கு உள்ளாக்கபட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கலஹா மேற்பிரிவு, கிதுல்முல்ல, அப்பர் டொனாலி, மாசிமலை, மல்பெரி, எட்ரி டிவிசன் ஆகிய பகுதிகளுக்கான கடிதங்களே சரியான முறையில் விநியோகிக்க உத்தியோகத்தர் இல்லாமையால் இவ்வாறு தேங்கி கிடக்கின்றன.
