மாகாணசபைத் தேர்தலை பழைய முறையிலேயே நடத்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.
இதன்படி கடந்த ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை இல்லாது செய்வதற்காக மாகாணசபை சட்டத்தில் திருத்தமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.
இது தொடர்பில் இருவருக்குமிடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.