இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், மேற்காசிய நாடான ஈரான் வெளிவிவகார அமைச்சர் சயீது அப்பாஸ் அராச்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
” இந்தியாவும், பாகிஸ்தானும் எங்கள் சகோதர நாடுகள். எங்கள் இடையே நூற்றாண்டு பழமையான கலாசாரம் மற்றும் நாகரிக உறவுகள் உள்ளன.
மற்ற நட்பு நாடுகளை போல அவர்களுக்கும் நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம்.
இந்த இக்கட்டான நேரத்தில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிப்பதற்கு இரு நாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்ய ஈரான் தயாராக உள்ளது.” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.