ஓடும் ரயிலில் அநாகரீகமாக செயற்பட்ட இளைஞன் எல்லயில் கைது!

ரயிலில் பயணித்த கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு யுவதிகளுக்கும், பானந்துறையைச் சேர்ந்த உள்நாட்டு யுவதிக்கும் தனது அந்தரங்க உறுப்பைக்காட்டி ஆபாசமாக நடந்துக்கொண்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலிலேயே எல்ல புகையிரத நிலையத்துக்கருகில் இன்று (15) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபரின் நடத்தையால் அச்சமுற்ற யுவதிகள், ரயில் பாதுகாப்பு அதிகாரியிடம் அது தொடர்பில் முறையிட்டனர். இதனையடுத்து எல்ல பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

 இதன் பின்னர்,எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம். அழகியவன்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து, ரயிலில் ஆபாசமாக நடத்துக்கொண்ட இளைஞரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்,விசாரணையின் பின்னர் பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று,பொலிசார் தெரிவித்தனர்.

ஆபாசமாகநடந்து கொண்ட நபரும், அதே ரயிலில் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles