கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட, தலவாக்கலை, கட்டுக்களை தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 65 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
சளி, காய்ச்சால் காரணமாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் இவர் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப்பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார் என அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
அதன்பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது எனவும் உறவினர்கள் கூறினர்.
இது தொடர்பில் பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகரை தொடர்பு கொண்ட போதிலும், அவர் சம்பவம் தொடர்பில் பதிலளிக்கவில்லை.
நமது நிருபர்