‘கொரோனா’வால் 15 வயது சிறுவன் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 183 ஆக உயர்வு!!

‘கொரோனா’ வைரஸ் தொற்றால் 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த சிறுவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அவர் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சைபலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கொழும்பு 7 பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 20 ஆம் திகதி வீட்டில் இருந்தபோது உயிரிழந்துள்ளார். கொவிட் நிலை நிமோனியாவே உயிரிழப்புக்கு காரணம்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles