‘கொரோனா’ வைரஸ் தொற்றால் 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த சிறுவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அவர் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சைபலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
அத்துடன், கொழும்பு 7 பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 20 ஆம் திகதி வீட்டில் இருந்தபோது உயிரிழந்துள்ளார். கொவிட் நிலை நிமோனியாவே உயிரிழப்புக்கு காரணம்.
இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.