தொழிலாளர்களின் போராட்டத்துக்கு கிடைத்தது தீர்வு!

ஆர்ப்பிக்கோ கம்பனியின் கீழ் இயங்கும் மஸ்கெலிய சாமிமலை டீசைட் தோட்டத்தில் தொழில்புரியும் தொழிலாளர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து அவற்றுக்கு தீர்வு வேண்டும் என வலியுறுத்தி நேற்று  (17)  போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தொழிற்சங்க போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகியன தொழிலாளர்களின் சார்பில் தோட்ட நிர்வாகங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாகவே தீர்வை வழங்குவதற்கு கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

இதன்படி தோட்ட   நிர்வாகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 60  தொழிலாளர்களின் இரண்டு நாட்கள் சம்பளம் உடன் கையளிக்கப்படவேண்டும்.

2.  மாதாந்ததம்  24  நாட்கள்  வேலை  வழங்கப்படவேண்டும் .

3   தேயிலை  தொழிற்ச்சாலை  இன்று முதல்    (18)      திறக்கப்பட வேண்டும்

போன்ற விடயங்களை செய்து தருவதாக உறுதி வழங்கியுள்ளதுடன்   ஏனைய விடயங்கள் சம்பந்தமாக எதிர்வரும் (24)   திகதி தோட்ட கம்பனி முக்கியஸ்தர்களுடன் நேரடியாக  கலகலந்துறையாடலின் பின்   தீர்வு ஒன்றை பெற்று தருவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

(சாமிமலை   ஞானராஜ்)

Related Articles

Latest Articles