பசறையில் வீதிமறியல் போராட்டம் முன்னெடுப்பு

லுணுகல நகர வீதியை அகலப்படுத்தி புனரமைத்து தருமாறு வலியுறுத்தி பிரதேச மக்களும், முச்சக்கர வண்டி சாரதிகளும் வீதிமறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளர்.

இன்று முற்பகல் 11 மணி முதல் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் லுணுகல – பசறை வீதியின் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலம் வரையான போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

நகரின் இருமருங்கிலும் வர்த்தக நிலையங்கள் காணப்படுவதோடு வாகனங்களை நிறுத்துவதற்கான போதிய இடப்பற்றாக்குறை நிலவுவதால் வீதியை அகலப்படுத்தி தருமாறு உரிய அதிகாரிகளுடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நடராஜா மலர்வேந்தன், ராமு தனராஜ்

Related Articles

Latest Articles