1600 பில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கை முன்வைப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை நவம்பரில் முன்வைக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஆயிரத்து 600 பில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்சவால் முன்வைக்கப்படவுள்ள இந்த இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் பெறப்படவுள்ளது.

இடைக்கால கணக்கறிக்கைக்கு சபை அங்கீகாரம் வழங்கிய பின்னர் கடந்த ஒரு வருட காலமாக தாமதிக்கப்பட்டு வந்த 200 பில்லியன் ரூபா நிர்மாணங்களுக்கான கொடுப்பனவுகளுக்கு செலுத்தப்படும் என்றும், 15 பில்லியன் ரூபா பாடசாலை நிர்மாண நிலுவைக் கொடுப்பனவுகளுக்காக செலுத்தப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இடைக்கால கணக்கறிக்கையின் மூலம் முழு கொடுப்பனவுகளையும் செலுத்த முடியாது என்ற போதிலும் மக்கள் மத்தியிலான பணப்புழக்கத்துக்கு இது உதவும் என்று சமுர்த்தி மற்றும் நுண்நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த பெப்ரவரியில் அரசாங்கம்இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்த போதும் அதற்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் மூலம் – சண்டே டைம்ஸ்

Related Articles

Latest Articles