பதுளை மாவட்ட பிரதான வைத்தியசாலையின் புற்றுநோயியல் பிரிவு இன்று தொடக்கம் (05-03-2021) காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
குறித்த வைத்தியசாலையில் புற்று நோயியல் பிரிவில் வைத்தியர் ஒருவரும் 30 நோயாளர்களுமாக 31 பேருக்கு, இன்று 05-03-2021 கொவிட் – 19 தொற்று உறுதியாகியுள்ளது என்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் கூறினார்.
கடந்த 3 ஆம் திகதி இம் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் அறிக்கைகள் 05-03-2021ல் வெளிவந்த போதே, இவ் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் தாதிகள் இருவருக்கும் பணியாளர்கள் அறுவருக்கும் கோவிட் 19 தொற்று உறுதியாகிருப்பமையும் தெரிய வந்துள்ளது. இவர்கள் கோவிட் 19 தடுப்பூசிகளை ஏற்கனவே ஏற்றியிருந்தவர்களென்றும் தெரிய வருகின்றது.
கோவிட் 19 தொற்றாளர்கள் மொத்தம் 39 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பமையினால், மருத்துவமனையின் புற்று நோயியல் பிரிவு கால வரையரையின்றி மூடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 60 நோயாளர்கள் பணியாளர்கள் 9 பேர் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எம். செல்வராஜா, பதுளை
