இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் இருவரும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் 60 வயதைக்கடந்தவர்கள்.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண்ணொருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கொரோனா வைரசும் தொற்றியமையே மரணத்துக்கு காரணம்.
கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 78வயதுடைய ஆணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட அவருக்கு கொரோனாவும் தொற்றியமையே மரணத்துக்கு காரணம்.
கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது உயிரிழந்துள்ளார். தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கொரோனாவும் தொற்றியதாலேயே மரணித்துள்ளார்.