‘கொரோனா’ – இலங்கையில் மேலும் ஐவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பெண்களும், இரு ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் ஐவரும் 60 வயதைக்கடந்தவர்கள்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 10, இரத்மலானை, கிருலபனை, கொழும்பு 02 மற்றும் தெமட்டகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles