அரசிலிருந்து வெளியேற தயார்! மஹிந்த அதிரடி அறிவிப்பு

அரசில் அங்கம் வகித்தாலும் கட்சியின் சுயாதீனத்தன்மையைக் காட்டிக்கொடுப்பதற்கு நாம் தயாரில்லை. அரசிலிருந்து வெளியேறுவதற்குகூட தயாராகவே இருக்கின்றோம் – என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அத்துடன், தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு முடிவையும் எதிர்கொள்வதற்கு தயார் எனவும் மஹிந்த நேற்று கூறினார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும், மஹிந்த வழங்கிய பதில்களும் வருமாறு,

கேள்வி – ஜனாதிபதி தேர்தலையா அல்லது பொதுத்தேர்தலையா நீங்கள் கோருகின்றீர்கள்?

பதில் – எதற்கும் நாம் தயார். பொதுத்தேர்தலை வழங்கினால் அதற்கு தயார், ஜனாதிபதி தேர்தல் வைக்கப்படுமானால் அதற்கும் தயார். எனவே, இதில் எமக்கு பிரச்சினை கிடையாது. இரண்டுக்கும் தயாராகவே இருக்கின்றோம்.

கேள்வி – தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டித்துள்ளீர்களே?

பதில் – ஆம், நான் மட்டுமல்ல எமது கட்சியில் உள்ள 95 வீதமானோர் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளனர்.

கேள்வி – அப்படியானால் இது விடயம் தொடர்பில் அரசு முன்னெடுக்கும் நடவடிக்கையை அனுமதிக்கவில்லையா?
பதில் – அனுமதிக்கவில்லை.

கேள்வி – நீங்களும் அரசில்தானே இருக்கின்றீர்கள்?

பதில் – எமக்கு சுயாதீன உரிமை உள்ளது. அரசில் அங்கம் வகித்தாலும் அந்த சுயாதீன உரிமையை காட்டிக்கொடுக்கவில்லை.

கேள்வி – நீங்கள் விரும்பாத விடயங்கள் இடம்பெற்றால் அரசில் இருந்து விலகவும் தயாரா?

பதில் – நாட்டுக்காக எதற்கும் நாம் தயார்.

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles