சபாநாயகர் பதவிக்கு எதிரணி தரப்பிலிருந்து வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
புதிய சபாநாயகர் தேர்வு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள நிலையில் இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எமது தரப்புடனும் கலந்துரையாடி தகுதியான நபரொருவரை சபாநாயகர் வேட்பாளராக எதிரணி முன்னிறுத்தினால் அதற்கு ஆதரவு வழங்கப்படும்.
சபாநாயகருக்கான தேர்வில் வெற்றி கிடைக்காதபோதிலும், ஏற்கனவே நடந்த சம்பவத்துக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்தால் ஆதரவளிக்கலாம்.” – என்றார்.
