2ஆவது அலைமூலம் 31,716 பேருக்கு கொரோனா – 147 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (11) 31 ஆயிரத்து 716 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 147  பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)

மினுவாங்கொட கொத்தணிமூலம் 3 ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 28 ஆயிரத்து 657 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 22 ஆயிரத்து 945 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 762 பேருக்கு வைரஸ் தொற்றியது.

அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 35 ஆயிரத்து 386 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 26 ஆயிரத்து 352 பேர் குணமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 874 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

Related Articles

Latest Articles