புத்தாண்டில் டிக்கோயாவில் கோர விபத்து – மூவர் படுகாயம்!

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் இன்று (01) முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இரண்டு வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்த நிலையில் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டனிலிருந்து மஸ்கெலியாவுக்கு சென்ற ஆட்டோவொன்றும், மஸ்கெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பஸ்ஸும், டிக்கோயா வனராஜா பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆட்டோ , வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஆட்டோவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துடன் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுநரை கைதுசெய்துள்ள ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles