ஈரானில் உள்ள சுமார் 20 இலக்குகளை அமெரிக்கப் படைகள் தாக்கியுள்ளன.
ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் பெரும்பாலானவை நடுவானிலேயே வெற்றிகரமாக தடுத்து அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் நாட்டின் பல பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
குறிப்பாக ஹார்முஸ் நீரிணை அருகே உள்ள ஜாஸ்க் மற்றும் பந்தர் அப்பாஸ் போன்ற முக்கிய இடங்கள் அமெரிக்கப் படைகளால் குறிவைக்கப்பட்டன.
இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்திக்கொண்ட இந்த நிகழ்வு, பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.










