72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

தமிழ் சினிமாவில் ‘திரைக்கதை மன்னன்’ என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட்டது.

வழிநெடுகிலும் லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் மல்க அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் பளிச்சிட்டவர் பாக்யராஜ்.

ரசிகர்களின் மனநிலையை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு, சாதாரண எளிய குடும்ப வாழ்க்கையை சுவாரசியமான திரைக்கதையாக மாற்றுவதில் வல்லவர். இதனால் தான் திரையுலகம் இவரை ‘திரைக்கதை மன்னன்’ என்று போற்றித் தழுவியது.

மறைந்த இயக்குனர் பாக்யராஜின் உடல், நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அங்கு அவரது உடலுக்குத் தமிழக முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், நடிகர்-நடிகைகள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த ஏராளமான பிரமுகர்கள் அவரது உடலுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்கள் அஞ்சலி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, மறைந்த இயக்குனர் பாக்யராஜின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் முறைப்படி நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர், அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. திரையுலகில் அவருக்கு மிகவும் நெருக்கமான முன்னணி நடிகர்களான சரத்குமார், பார்த்திபன் ஆகியோர் பாக்யராஜின் உடலைத் தங்களது தோள்களில் சுமந்து சென்ற உருக்கமான காட்சி அங்கிருந்தோரை நெகிழச் செய்தது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஒட்டுமொத்த திரையுலகினரும் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

இறுதி ஊர்வலப் பாதையின் வழிநெடுகிலும், சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு நின்று, தங்களின் அன்பிற்குரிய படைப்பாளிக்கு பூக்களைத் தூவி கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ராஜ்மோகன் ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து, தமிழக அரசின் முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கம்பீரமாக அணிவகுத்து நின்ற பொலிஸார் தலா 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அஞ்சலி செலுத்த, ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவு தமிழ் சினிமா வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத ஒரு பெரும் இழப்பாக மாறியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles