ஈரானியத் தரப்பினர் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேட்டோ உச்சிமாநாட்டை முடித்துக்கொண்டு திரும்பும் வழியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் இந்த ஆர்வம் குறித்து ட்ரம்ப் விவரித்திருந்தாலும், ஈரான் தரப்பிலிருந்து இதைப் பற்றி எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியிடப்படவில்லை.
இதற்கு முந்தைய நாள் வரை பேச்சுவார்த்தைகள் தேவையற்றது என்று கூறிய அவர், தற்போது முற்றிலும் மாறுபட்ட கருத்தை முன்வைத்துள்ளார்.










