மலையக கல்வி மேம்பாட்டுக்காக இந்தியா வழங்கும் உதவி அளப்பரியது

எமது சமூகம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற வேண்டும் என்றால் கல்வி தான் எமக்கான ஒரே சாதனம். அந்த கல்வியை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், அந்த கல்விக்காக இந்திய அரசாங்கம் மலையக மாணவர்களுக்கு வழங்கும் உதவிகளுக்கு சாதாரணமாக நன்றி கூறி கடந்து போக முடியாது என்றார்.

கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியுள்ள தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி வாய்ப்புகளை கடந்த 79 ஆண்டுகளாக வழங்கும் (இலங்கை தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளை ) CEWET அமைப்பின் விருது வழங்கல் நிகழ்வு நேற்று (10.08.2026) இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டு உயைாற்றிய போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்
ஒரு சமூகத்துக்கு உட்கட்டமைப்புகளை செய்வதை விட அந்த சமூகத்துக்கு கல்வியை வழங்குவது அந்த சமூகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியையும் முன்னோக்கி கொண்டு செல்லும் அந்த வகையில் இந்திய அரசு எமக்கான உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றது.

எமது சமூகத்தைப் பொறுத்தவரையில் எமது மாணவர்களுக்கு திறமைகள். தகுதிகள் இருந்தும் வறுமைக் காரணமாக உயர்கல்வி வாய்ப்பினை இழக்கின்றனர். குடும்பச் சூழல். வறுமை காரணமாக உயர்கல்விக்கு செல்வது மிகவும் குறைவாகவே உள்ளது.

அதேபோல் CEWET புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக அதிகரித்தது மட்டுமல்லாமல் வழங்குகின்ற தொகையையும் அதிகரிப்பது என்பது உண்மையிலே வரவேற்கத்தக்க மகிழச்சிக்குரிய விடயமாகும்.

எனவே, இந்திய அரசு வழங்கும் இந்த புலமைப்பரிசில் தொகையை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி உங்களை நீங்கள் பட்டைத் தீட்டிக்கொண்டு ஒரு கல்வியலாளராக உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளும் போது, மலையக சமூகம் ஏனைய சமூகங்களுக்கு நிகராக வரக்கூடிய சமூகமாக மாறும்.

எம் சமூகத்தில் பல பேராசிரியர்கள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள், கல்வியலாளர்கள், என பலர் உயர்ஸ்தானத்தில் இருந்தாலும் கூட எண்ணிக்கை அளவில் மிகவும் குறைவாகவே இருக்கின்றது. எனவே எண்ணிக்கை அளவில் அதனை அதிகரிக்கும் பொறுப்பும், கடப்பாடும் எமக்கு இருக்கின்றது.

எனவே ஒட்டுமொத்த சமூகமும் கடமையை உணர்ந்து செயற்படும் போது இந்த நாட்டில் மிளிரக்கூடிய சமூகமாக எமது மலையக சமூகம் மாறும். அதற்காக மலையக கல்வியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை நாம் வேகமாக முன்னெடுத்து வருகிறோம் என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles