நாட்டின் சில பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
மழைப்பொழிவு: மேல் மற்றும் சபரகமுவா மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் பல தடவைகள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மாலை நேர மழை: அம்பாறை, மொணராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வறண்ட வானிலை: நாட்டின் ஏனைய பிரதேசங்களில் முக்கியமாக வறட்சியான வானிலை நிலவும்.
பலத்த காற்று: மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
எச்சரிக்கை: இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கடற்பகுதிக்கான வானிலை முன்னறிவிப்பு
மழை: நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
காற்றின் வேகம்: தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசும். காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றராக காணப்படும். காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். ஏனைய கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
கடலின் நிலை: காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். தீவைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்.
அலைகளின் உயரம்: புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 – 2.5 மீற்றர் வரை உயரக்கூடும்.
எனவே, குறித்த கடற்பகுதிகளில் கடற்தொழிலில் ஈடுபடும் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
