ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு – 20 இலங்கையர்களிடம் விசாரணை!

ISIS தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் பேரில் 20 இலங்கையர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.ஸ் தீவிரவாத சந்தேக நபர் ஒருவரின் தொலைபேசியில் 702 இலங்கையர்களின் தொடர்பு இலக்கங்கள் உள்ளிட்ட விபரங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதன் அடிப்படையில் இவ்வாறு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புவிசாரணை திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு விடயங்களை முன்வைத்துள்ளது.

பேணிய குற்றச்சாட்டின் பேரில் சுமார் 20 பேரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த தொலைபேசி இலக்க விவகாரத்தின் அடிப்படையில் 20 சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles