ஜனாதிபதியின் செயலாளர் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன? கடிதம் ஊடகங்களில் வெளியாகாமல் இருக்க நடவடிக்கை

ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதற்காக பீ.பி. ஜயசுந்தர,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு  அனுப்பியுள்ள மிக நீண்ட கடிதத்தில் பல முக்கிய விடயங்களை வெளியிட்டுள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பல சர்ச்சைக்குரிய தகவல்களை ஜயசுந்தர அந்த கடிதத்தில் வெளியிட்டுள்ளார். தான் பதவியில் இருந்த காலத்தில் எதிர்கொண்ட பிரச்சினைகளை ஜயசுந்தர கடிதத்தில் விரிவாக எடுத்துரைத்துள்ளதுடன் சில தவறுகளை அம்பலப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதிக்கு அனுப்பி இந்த பதவி விலகல் கடிதம் ஊடகங்களில் வெளியாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பீ.பி. ஜயசுந்தர ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து விலகினாலும் அவர் தொடர்ந்தும் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றுவார் என அந்த ஆங்கில ஊடகம் கூறியுள்ளது.

ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்படவுள்ள தற்போது பிரதமரின் செயலாளராக கடமையாற்றும் காமினி செனரத், அந்த பதவியில் இருந்து விலகுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என கூறப்படுகிறது.

அதேவேளை நிர்வாகத்துறையின் உயர் அதிகாரிகளின் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சரவையிலும் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என பேசப்படுகிறது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles