ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட அமைதியின்மை சம்பவங்களால் 103 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் 55 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஏனையோர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
