‘ மலையக சமூகத்தை தோட்டத் தொழிலாளர்களாக இல்லாமல் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதன் மூலம் தேயிலை உற்பத்திக்கு அதிக பங்களிப்பை பெற்றுக் கொடுக்க முடியும்.” என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர்,
‘ தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊழியர் சேம நிதி , ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிகள் பல வருடங்களாக சில பெருந்தோட்ட நிறுவனங்களால் செலுத்தப்படவில்லை.
தேயிலை விளைச்சலில் 70 வீதத்துக்கும் அதிகமானவை சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களால் குறைந்தபட்ச நிலத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் அரச மற்றும் நிறுவன உரிமையுடைய தேயிலைத் தோட்டங்கள் குறைந்த பங்களிப்பையே வழங்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில், இதுபோன்ற தோயிலை தோட்ட நிலங்களை பல்வேறு நிறுவனங்களுக்கு விற்காமல்,தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கி, அவர்களை ஒரு தொழில்முனைவோராக மாற்றும் பணியை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் முன்னெடுப்போம்.
இந்த மலையக சமூகத்தை தோட்டத் தொழிலாளர்களாக இல்லாமல் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதன் மூலம் தேயிலை உற்பத்திக்கு அதிக பங்களிப்பை பெற்றுக் கொடுக்க முடியும்.” – என்றார்.
