மலையகத்துக்கான புகையிரத சேவைகள் இன்று (16) அதிகாலை 4 மணி முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விசேட புகையிரதம் நேற்று மாலை கிறேஸ்வெஸ்டனுக்கும், நானுஓயாவிக்கு இடைப்பட்ட பகுதியில் தடம் புரண்டது.
இதனால் நேற்று பிற்பகல் 3 மணி முதல் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் தடைப்பட்டன.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வருகை தந்த பயணிகள், தலவாக்கலை புகையிரத நிலையத்திலிருந்து பேருந்துகள் ஊடாக அனுப்புவதற்கும், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பயணிகள் நானுஓயாவிலிருந்து அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படிருந்தன.
இதனால் பயணிகளும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
இந்நிலையில் ரயில் பாதையை சீர்செய்யும் பணி இரவோடிரவாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று 16 ம் திகதி அதிகாலை நான்கு மணி முதல் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.
நேற்று புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக மலையகத்திற்கான மூன்று புகையிரத சேவைகள் இரத்தச் செய்யப்பட்டதாக புகையிரத திணைக்களத்தின் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
மலைவாஞ்ஞன்










