நிராகரிக்கப்பட்ட 4 வாக்குகள் குறித்து வெளியான தகவல்!
நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட நான்கு வாக்குகள் தொடர்பான உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிராகரிக்கப்பட்ட 4 வாக்குகளில் இரண்டு வாக்குகள் ரணிலுக்கு அளிக்கப்பட்டவை எனவும், ஒன்று அநுரவுக்கு வழங்கப்பட்டதெனவும், மற்றைய வாக்குசீட்டு வெறுமனே காணப்பட்டதாக தெரியவருகின்றது.
வர்த்தமானி அறிவிப்பு வௌியானது
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
3 , 4, 5 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்கள் நாளை எரிபொருளை பெற்றுக்கொள்ளலாம்
வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி இலக்கம் மற்றும் அதற்குரிய நாளின் படி, நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் நாளை (21) ஆரம்பிக்கப்படும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின்...
மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது
இலங்கை மின்சார சபை இன்று திட்டமிடப்பட்ட மின்வெட்டை மூன்று மணிநேரமாக குறைக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, A, B, C, D, E, F, G, H,...
காலி முகத்திடல் பண்டாரநாயக்க உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் எல்லைக்குள் நுழைய தடை
காலி முகத்திடலிலுள்ள பண்டாரநாயக்க உருவச்சிலையை சூழவுள்ள 50 மீட்டர் பிரதேசத்திற்குள் ஒன்றுகூடுவதற்கு தடைவிதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டை பொலிஸாரின் கோரிக்கையை பரிசீலித்ததை அடுத்து, கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
பண்டாரநாயக்க...
நாடாளுமன்றம் ஜூலை 27 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்றம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பிற்காக இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது.
இன்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு...
தினேஷ் குணவர்தனவுக்கு பிரதமர் பதவி?
புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க கடமையேற்ற பின்னர், தினேஷ் குணவர்தன பிரதமராக நியமிக்கப்படவுள்ளார்.
அத்துடன், சர்வக்கட்சி அரசுக்கும் ரணில் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் நாளை பதவியேற்பு!
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாளை (21) காலை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.
மக்களின் எதிர்பார்ப்பை நாடாளுமன்றம் நிறைவேற்றவில்லை – அநுர!
" நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நாடாளுமன்றம் நிறைவேற்றவில்லை. அதனை இந்த நாடாளுமன்றம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கவும் இல்லை." - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க...
ஜனாதிபதி தேர்தலில் ரணில் வெற்றி! 134 எம்.பிக்கள் ஆதரவாக வாக்களிப்பு!! டலசுக்கு 82 வாக்குகள்!!
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்காக நாடாளுமன்றத்தில் இன்று (20) நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக...











