எதிர்காலத்தில் மின் துண்டிப்பு இடம்பெறமாட்டாது – காமினி லொக்குகே
எதிர்காலத்தில் மின் துண்டிப்பு இடம்பெறமாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் கிடைப்பதன் காரணமாக மின் துண்டிப்பு இடம்பெற மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘நீர் வழங்கல் சபை தனியார் மயமாகுமா’?
நீர் வழங்கல் சபையை தனியார் மயப்படுத்த விடமாட்டேன் என்ற வாக்குறுதியை உங்களுக்கு தருகிறேன். நான் அமைச்சராக இருக்கும் வரை அது நடக்காது. எமது அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் அது ஒருபோதும் நடக்காது என்பதே...
குழப்ப வேண்டாம் – எதிரணிகளிடம் அமைச்சர் கோரிக்கை
அரசியல் செய்யும் உரிமை எதிர்க்கட்சிக்கு உள்ளது. எனினும் நாட்டிற்காக மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களை பின்னடைவு செய்யும் செயல்களில் எதிர்க்கட்சி ஈடுபடக்கூடாது என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைக்கு சு.க. வரவேற்பு
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகிழ்ச்சியடைவதுடன் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமென கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேக்கர தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிகழ்த்திய...
UAE தாக்குதல் – இலங்கை கடும் கண்டனம்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாக பல பொதுமக்கள் கொல்லப்பட்டதை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும்...
சுகாதாரத் துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை!
நாட்டின் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் உள்ள 70 தீவிர சிகிச்சை கட்டில்களில், தற்போது 52 கட்டில்கள் கொவிட் வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலத்தை விட தற்போது...
மஹிந்தானந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவருவது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்துவருகின்றது என அறியமுடிகின்றது.
இது தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன எனவும், பங்காளிக்கட்சிகளுடனும்...
கற்பாறைகள் இருந்து ஆணின் சடலம் மீட்பு!
கேகாலை, தெஹியோவிட்ட, அட்டுலுகம புஞ்சிக்கந்த பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இரண்டு கற்பாறைகளுக்கு இடையில் சிக்கியிருந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பிரதேசவாசிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
45 வயதான ஆணொருவரே இவ்வாறு...
‘வாலால் நாயை ஆட்டுவிக்க முடியாது’ -சுதந்திரக்கட்சிக்கு மொட்டு கட்சி பதிலடி
" நாய் வாலை ஆட்டினாலும், வாலால் நாயை ஆட்டுவிக்கமுடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூண்டோடு வெளியேறினாலும் அரசுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான...










