ஒருவர் வெளியே, இன்னொருவர் உள்ளே!
நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து மஹிந்த சமரசிங்க விலகியதை அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு டபிள்யூ. எச். லலித் வர்ணகுமாரவின் பெயரை வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவுக்கான தூதுவராக பதவியேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய,...
மேலும் 347 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணம்
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 347 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 540,387 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சருக்கு எச்சரிக்கை விடுக்கும் சுகாதார பரிசோதகர்கள்
எமது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படாவிட்டால் சுகாதார அமைச்சருக்கு தனது அமைச்சு பதவியை இழக்க நேரிடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கின்றனர்.
பிரச்சினை எல்லை மீறுவதற்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டும் என அவர்கள்...
நாட்டின் சில பிரதேசங்களில் இன்றும் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள்
எரிவாயுக்களின் கலவை செறிமானத்தை ஒழுங்குபடுத்துவதற்கு எந்தவொரு நிறுவனமும் இல்லாதமை வருத்தமளிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் சமையல் எரிவாயு தொடர்பான பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மாத்தறை...
சம்பிக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை !
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் திகதியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இவ்வழக்கை நாளை மறுதினம் (2) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
2016...
எதிர்காலத்தில் ஜனாதிபதியை ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்திற்கு அழைக்க வேண்டிய நிலை-சபாநாயகர்
இன்று நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக எந்தவொரு அமைச்சரும் நாடாளுமன்றில் இல்லையென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்றில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டியது அவசியமெனவும் சபாநாயகர்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
ஒமிக்ரோன் கோவிட் மாறுபாடு நாட்டிற்குள் நுழைவதனை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் புதிய...
எரிவாயு விபத்து, தர பகுப்பாய்வு அறிக்கை
எரிவாயு விபத்துக்கள் தொடர்பான தர பகுப்பாய்வு நிபுணர் அறிக்கையை இந்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
நான்கு பேர் கொண்ட நிபுணர் குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாக...
எரிவாயு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண விசேட குழு!
வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (30) அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள்...
மியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி – அமைச்சரவை அனுமதி
மியன்மாரிலிருந்து 20 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு
அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட
விலையின்கீழ் இக்கொள்வனை மேற்கொள்வதற்காக வர்த்தக அமைச்சராலேயே
குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.




