வீடுகளில் சிகிச்சைபெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு
நாட்டில் கொவிட் -19 தொற்றுக்குள்ளானவர்களில் 109,373 பேருக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.
தற்போதும் 3,813 தொற்றாளர்கள் வீடுகளிலேயே சிகிச்சைபெற்று வருகின்றனர். வீடுகளில் சிகிச்சைபெறும் தொற்றாளர்களிள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் வீடுகளில் சிகிச்சையளிக்கும் பிரிவின்...
மரக்கறி விலையும் உச்சம் தொட்டது!
நாட்டிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்குக் கிடைக்கும் மரக்கறிகளின் விளைச்சல் குறைவடைந்துள்ள நிலையில் நுகர்வோரால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மரக்கறிகளுக்கான சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள முதல்நிலை வார சந்தைகள் சிலவற்றில் இந்த நிலை...
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது ஏன்? வெளியானது தகவல்
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும், இதனால் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது எனவும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
வலுசக்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற...
‘பயங்கரவாத தடைச்சட்டம் மீளாய்வு’ – இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம்
1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை (தற்காலிக ஏற்பாடுகள்) மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று (15) கையளிக்கப்பட்டது.
அக்குழுவின் தலைவரும்...
கொவிட் தொற்றால் மரணித்தோரின் எண்ணிக்கை 14,000ஐ கடந்தது
நாட்டில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் எண்ணிக்கை 14,000ஐ கடந்துள்ளது.
அதற்கமைய, மேலும் 21 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (14) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்...
நாட்டில் மேலும் 512 பேருக்கு கொவிட் தொற்று
நாட்டில் மேலும் 512 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 552,084 ஆக அதிகரித்துள்ளது.
180 மில்லியன் ரூபா பெறுமதியான கொகேய்னுடன் துனீசிய பிரஜை கைது
180 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 4 கிலோ 527 கிராம் கொகேய்னுடன் சர்வதேச நிறுவனமொன்றின் தலைவர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் இன்று (15) கட்டுநாயக்க விமான நிலையத்தில்...
மன்னாரில் சம்பவம் : குண்டு வைத்து தகர்க்கப்பட்ட நீர்த்தாங்கி : (VIDEO)
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி கிராமத்தில் சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த பாரிய நீர் தாங்கி இன்று திங்கட்கிழமை (15) காலை தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு இராணுவத்தின் உதவியுடன் குண்டு...
விடுதலையானாா் ரியாஜ் பதியுதீன்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் தடுப்புக் காவலிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளாா்.
நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாய் வழியாக வழங்கப்படும் கொவிட் தடுப்பு மருந்தை இலங்கையில் பயன்படுத்த அனுமதி
கொவிட் தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் 'மொனுபிரவீர்' என்ற மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு, கொவிட்-19 தொழில்நுட்ப குழு அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இந்த மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கான இயலுமை தொடர்பில்...





