தேசிய கல்வியியல் கல்லூரிகளில் 18 ஆம் திகதி முதல் கற்பித்தல் ஆரம்பம்
தேசிய கல்வியியல் கல்லூரிகளின் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.
கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
அதற்கமைய, நாளை (15) கல்வியியல் கல்லூரிகளின் செயற்பாடுகள்...
எதிர்ப்புகள் வலுப்பதால் மாகாண தேர்தலுக்கு தயாராகிறது அரசு!
மாகாணசபைகளுக்கான தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்டமூலம் விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ளதெனவும், அதற்கு எதிரணிகளும் முழு ஆதரவை வழங்குமென்றும் அறியமுடிகின்றது.
2019 இல் ஆட்சிக்கு வந்த...
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் தைத்திருநாள் வாழ்த்து
விவசாயம் செழிப்படையக் காரணமான சூரிய பகவானுக்கு நன்றி நவிலும் தைப்பொங்கல் தினம், இந்துக்களின் சிறப்புமிக்க கலாசாரம் மற்றும் மத ரீதியிலான பண்டிகையாக விளங்குகின்றது. உலக வாழ் இந்துக்களுடன் இணைந்து இப்பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை...
யாழில் சிறைக்கூண்டுக்குள் பொங்கல்!
பயங்கரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் விடுதலைப் பொங்கல் என்ற தொனிப்பொருளில் பொங்கல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில்...
மரண தண்டனை விதிக்கப்பட்ட எமில் ரஞ்சன் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்ப்பு
மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைதிகளால் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க...
கொவிட் தொற்றால் மேலும் 11 பேர் மரணம்!
நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,174 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில்...
5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு -சுற்றறிக்கை வெளியானது
அரச சேவையாளர்களுக்கும், ஓய்வூதியம் பெறுநர்களுக்கும் மாதாந்தம் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது.
மாதாந்தம் வேதனம் பெரும் நிலையான அல்லது தற்காலிக மற்றும் ஒப்பந்த கால ஊழியர்கள் மற்றும் நாளாந்த வேதனம்...
நாட்டின் சில பாகங்களில் திடீர் மின் விநியோகத்தடை!
நாட்டின் சில பகுதிகளில் மின்விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சாரசபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளதால் மேற்படி மின் விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேங்காய் விலை அதிகரிப்பு!
சந்தையில் தேங்காயின் விலை 10 முதல் 15 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
விளைச்சல் குறைவடைந்துள்ளமையே விலை அதிகரிப்புக்கான காரணம் என இலங்கை தெங்கு செய்கையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உரம் இன்மையால் தேங்காயின் விளைச்சல் குறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், சந்தையில்...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 181 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 181 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 567,700 ஆக அதிகரித்துள்ளது.












