அஜித் ரோஹண பதவியில் மீண்டும் மாற்றம்
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குற்றவியல் மற்றும் போக்குவரத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மேலதிகமாக அவர் இப்பதவிக்கு பொலிஸ்மா அதிபர் சி.டி....
பெருந்தோட்ட சுகாதாரதுறை முழுமையாக மேம்படுத்தப்படும் – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு
பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்கள் முழுமையாக மேம்படுத்தப்படும். அதன் நிமித்தமே சுகாதார நிறுவனங்களை அரசு பொறுப்பேற்றுள்ளது. இதன்மூலம் எமது மக்களின் சுகாதாரப் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,...
எங்கள் ஆட்சியில் ‘டீல்’ அரசியலுக்கு இடமில்லை!
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 'டீல்' அரசியலுக்கு இடமில்லை. தனிநபர்கள் மற்றும் அவர்களின் சகாக்கள் செல்வாக்கு செலுத்த முடியாது. கொள்கைகளின் அடிப்படையிலேயே செயற்பாடுகள் இடம்பெறும் - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
அமைச்சர் ஜயந்த சமரவீரவுக்கு கொவிட்
இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன ஆகியோருக்கு கொவிட் தொற்றுறுதியாகியிருந்தது.
விவசாயிகளுக்கு இழப்பீடு – அமைச்சரவை அனுமதி!
2021 - 2022 ஆண்டுகளில் நெல் பெரும்போக அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி குறித்த விவசாயிகளுக்கு ஒரு கிலோ நெல்லுக்காக தலா 25...
ஆறு மாதங்களுக்கு மேலாக கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகம் துண்டிப்பு!
ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக நீர் விநியோக கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகத்தை துண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம்...
யாழில் வாள்வெட்டு கும்பல் அடாவடி (படங்கள்)
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று , வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து விட்டு, தப்பி...
போலி இரத்தினக் கற்களால் வியாபாரிகள் ஏமாற்றம்
செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட போலி இரத்தினக்கற்கள் சந்தைக்கு வந்துள்ளமையால் இரத்தினக்கல் தொழிற்துறை சார்ந்தோர் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இரத்தினபுரி இரத்தினக்கல் சந்தைகளிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகப் பிரசித்தி பெற்ற இயற்கை இரத்தினக்கற்களுக்கு இரத்தினபுரி பிரதேசம் புகழ்...
‘தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம்’ – முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்து!
எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை எதிர்வரும் 7 ஆம் திகதி ஏல விற்பனைக்கு விடப்படுவதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ள நிலையில் இதனை மனிதாபிமான...
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கும் கொரோனா!
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் வீட்டிலேயே தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, கோகிலா குணவர்தன உள்ளிட்டவர்களுக்கும்...













