அரசு ‘பெயில்’ – அடித்துக் கூறுகிறார் சஜித்!
தற்போதய அரசு ஒரு தோற்றுப்போன அரசு எனவும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களும் தோற்று விட்டார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணம் - நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஐக்கிய...
‘ ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக இலங்கை மாறும்’ – பிரதமர் நம்பிக்கை
துறைமுகங்களை நிர்மாணித்து இந்த நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி செல்வோம் என்ற நம்பிக்கையை நாம் கைவிடவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
தெற்காசியாவின் கடல்சார்...
வெலிக்கடை சிறைச்சாலை கலவரம் – நீதிமன்ற தீர்ப்பு வெளியானது!
2012 இல் வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின்போது 8 கைதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு இன்று (12) அறிவிக்கப்பட்டது.
இதன்படி இந்த சம்பவத்தின்போது சிறைச்சாலை ஆணையாளராக கடமையாற்றிய ஏமில்...
பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு:வெளியான தகவல்கள்
பொரளையில் உள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்தில் இருந்து நேற்று (11) மீட்கப்பட்ட கைக்குண்டானது மன்னாரில் தயாரிக்கப்பட்டதெனத் தெரியவந்துள்ளது.
இந்த கைக்குண்டு 13 வயது சிறுவர் ஒருவரின் ஊடாக குறித்த தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்...
கொவிட் தொற்றால் மேலும் 14 பேர் பலி!
நாட்டில் மேலும் 14 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (11) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (12) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில்...
எதிர்வரும் பண்டிகை காலத்தில் நாடு முடக்கப்படுமா?
எதிர்வரும் பண்டிகை காலத்தில் நாடு முடக்கப்படுமா என்பது தொடர்பில் தற்போதைக்கு கூற முடியாது என வைரஸ் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் ஜுட் ஜயமஹ தெரிவித்துள்ளார்;.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (12) இடம்பெற்ற...
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி?
நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைக்கப்பெற்று, பொருளாதார நிலைமை வழமைக்கு திரும்பியதன் பின்னர் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க வாய்ப்பு இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
வாகன...
சமையல் எரிவாயு தொடர்பில் வர்த்தமானி வெளியானது
சமையல் எரிவாயு (LP Gas), கொள்கலன், ரெகுலேட்டர்கள் மற்றும் குழாய் ஆகியவற்றை தரப்படுத்த இலங்கை தரக் கட்டுப்பாட்டு நிறுவகத்துக்கு (SLSI) அதிகாரமளித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானிக்கு நிதியமைச்சர் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 159 பேர் குணமடைந்தனர்!
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 159 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (12) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா...
ஊருக்குள் நுழைந்த 15 அடி நீளமான மலைப்பாம்பு
தென்மராட்சியின் மீசாலை அல்லாரை கிராமத்தில் 15 நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அல்லாரை பகுதியில் உள்ள வீட்டில் சேவல் ஒன்றை மலைப்பாம்பு பிடித்துள்ளது. சேவல் கத்தும் சத்தத்தினை கேட்ட வீட்டிலிருந்தவர்கள் சென்று...










