அபாய வலயத்தில் வசிக்கும் 12,000 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பிரதமர் பணிப்பு
அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 12 ஆயிரம் குடும்பங்களை விரைவில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (16) ஆலோசனை வழங்கினார்.
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில்...
கொரோனா தொற்று உறுதியான 528 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 528 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 552,274 ஆக அதிகரித்துள்ளது.
மீண்டும் முடக்கப்படுமா நாடு? விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தால், அரசாங்கம் மற்றொரு முடக்கத்தை நோக்கி செல்லவேண்டி நிலை உருவாகுமென சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் திடீரென அதிகரிப்பு ஏற்பட்டால், முடக்கம்...
ஊழல் அற்ற மக்கள் ஆட்சியை உருவாக்குவேன் – சஜித் சபதம்!
" ஊழல், மோசடி அற்ற ஆட்சியை உருவாக்கி தாய் நாட்டையும், மக்களையும் காப்பேன்." என்று சூளுரைத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரச எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்டு...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான வழக்கிலிருந்து நீதியரசர்கள் இருவர் இராஜினாமா
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைக்காக நியமிக்கப்பட்ட ஏழு போ் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமிலிருந்து இருவர் விலகியுள்ளனா்.
இன்று...
பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதே பாதீட்டின் நோக்கம்
கொரோனா தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதே இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச
இன்று (16) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம்...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 429 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 429 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 524,740 ஆக அதிகரித்துள்ளது.
‘இது ஆரம்பம் மட்டுமே, அதிரடி தொடரும்’ – கொழும்பு கூட்டத்தில் விண்ணதிர முழங்கும் கோஷம்
" இது ஆரம்பம் மட்டுமே. மக்களின் வாழும் உரிமை உறுதிப்படுத்தப்படும்வரை போராடுவோம். உயிர் தியாகம் செய்வதற்கும் தயார்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சூளுரைத்தனர்.
விவசாயம் அழிப்பு, பொருட்களின் விலையேற்றம்,...
மக்களை தடுக்கும் அதிகாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை – ரஞ்சித் மத்தும பண்டார
”வாகனங்களில் பயணிக்கும் நபர்களின் பெயர்ப் பட்டியலைத் தொகுப்பது, புகைப்படங்களை எடுப்பது என்று தனிமனிதரின் சுயாதீனத்திற்கு கூட சவால் விடுக்கும் அளவிற்கு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பதோடு, அந்த உத்தரவுகளின்படி செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக ஐக்கிய...
‘சஜித் கொத்தணி’ உருவாகும் அபாயம் – பதறுகிறது மொட்டு கட்சி!
" கொரோனாவுடன் விளையாடக்கூடாது. போராட்டம் நடத்தி அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல. எதிரணியின் போராட்டத்தால் 'சஜித் கொத்தணி' உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது." - என்று காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று தெரிவித்தார்.
இது...





