சம்பந்தனை நேரில் சந்தித்தார் வடக்கின் புதிய ஆளுநர்
புதிய வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இன்று கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது சமகால விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டன.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி விருந்துபசாரம்! – 24 பேர் மாட்டினர்; 22 பேர் தப்பியோட்டம்
குருநாகல், ரம்பவௌ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட விருந்துபசாரத்தில் பங்கேற்ற 24 பேரைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 12 மதுபான போத்தல்கள், வெற்றுமதுபான போத்தல்கள் மற்றும் 1,75,000 ரூபா பணம் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
முகத்தளப்புத்தகத்தினூடாக...
படிப்படியாக குறைவடையும் தொற்றாளர்களின் எண்ணிக்கை
நாட்டில் மேலும் 461 பேர் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதன்படி, 532679 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன், இன்றையதினம் 339 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 493,314 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (18) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட்...
24 மணிநேரத்தில் 26 பேர் சிக்கினர்!
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 26 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை...
வவுனியா விபத்தில் பலியான சிறுவனுக்குக் கொரோனா!
விபத்தில் உயிரிழந்த சிறுவனுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா - செட்டிகுளம், முதலியார்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவர் மரணமடைந்திருந்தார்.
சிறுவன் பயணித்த...
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 4,743 முறைப்பாடுகள்-டலஸ் அழகப்பெரும
நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில், சுமார் 21 வீதமானோர் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றும் அவர்...
இலங்கையில் பசு வதைக்கு தடை – விரைவில் சட்டம் நிறைவேறும்
பசுவதை தடைச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
விவசாயத்துறை அமைச்சரும், மாகாணசபை அமைச்சரும் இணைந்தே இதற்கான கூட்டு பிரேரணையை அமைச்சரவையில் முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பான...
பதவி விலகிவிட்டாரா கம்மன்பில? வெளியான தகவல்
அமைச்சரவை இணைப்பேச்சாளர் பதவியை அமைச்சர் உதய கம்மன்பில இராஜினாமா செய்யவில்லை - என்று மற்றுமொரு அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தற்போது அமைச்சர் உதய...
ஜே.ஆர். யுகத்துக்கு முடிவு கட்டுகிறார் கோட்டா! புதிய அரசமைப்புக்கான பணிகள் நிறைவு!!
" புதிய அரசியலமைப்பை இயற்றும் பணி நிறைவுக்குவந்துள்ளது. இறுதி வரைபை தயாரிப்பதற்காக உத்தேச வரைபு நகல் சட்டவரைஞர் திணைக்களத்துக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டம் கூட்டத்தொடர் முடிந்ததும், புதிய...




