யாழில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு!
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை பகுதியில் அதி சொகுசு பேருந்து மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு 10:30...
குறைந்தபட்ச சம்பளமாக ரூ 17,500 நிர்ணயம்
தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை கூடியது.
இதன்போதே தொழில் அமைச்சரால் மேற்படி யோசனை முன்வைக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
2016...
மொட்டு கட்சியுடன் முரண்படும் அமைச்சர்களுக்கு ஆப்பு?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானத்துக்கு முரணாக செயற்படும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கு அடுத்த தேர்தலின்போது போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்ககூடாது என கட்சி தலைமைப்பீடத்திடம் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் யோசனை முன்வைத்துள்ளனர்.
12 நாடாளுமன்ற...
ரமலான் மாதத்தில் போர் நிறுத்தம்கோரி ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின்போது காசாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில்...
மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த 4 சந்தேக நபர்கள் கைது
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த சந்தேக நபர்கள் நான்கு பேரை அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய...
கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக அடக்குமுறைகளை கண்டித்து போராட்டம்
கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக அடக்குமுறைகளை கண்டித்தும் தொடரும் நிருவாக செயற்பாடுகளில் அத்துமீறிய தலையீடுகளுக்கு தீர்வு காணும் நோக்குடனும் அனைத்து சிவில் சமூகம் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று நேற்று (25) காலை...
10 ஆயிரம் ரூபா அதிகரிப்புடன் அரச ஊழியர்களுக்கு 10 ஆம் திகதி சம்பளம்!
அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத சம்பளம், எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் 2,500...
ஒக்டோபர் 05 ஜனாதிபதி தேர்தல் : கனடாவில் வைத்து திகதியை வெளியிட்டார் அநுர
ஜனாதிபதி தேர்தலை ரணில் விக்கிரமசிங்க நடத்துவாரா என சிலர் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படாவிட்டால் தேர்தலுக்கு முன்னதாகவே ரணில் விக்கிரமசிங்கவுக்கு வீடு செல்ல நேரிடும் என்று தேசிய மக்கள் சக்தியின்...
கண்டி – மாத்தளை வீதியில் விபத்து: இளைஞன் பலி!
கண்டி – மாத்தளை பிரதான வீதியில் கொஹொம்பிலிவெல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
வேகமாக பயணித்துக்கொண்டிருந்த காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதிலேயே மோட்டார்...
இபோச பஸ் சாரதி, நடத்துனர்மீது கத்திக்குத்து தாக்குதல்: பதுளையில் பயங்கரம் – இருவர் கைது!
பதுளையில் இபோச பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதியும், நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பதுளையில் இருந்து முத்தேட்டுகமைக்கு செல்லும் தனியார்...













