X-Press Pearl கப்பலின் சிதைவுகளை அகற்ற நாட்டிற்குள் உள்நுழைந்த சீனக் கப்பல்
X-Press Pearl கப்பலின் சிதைவுகளை அகற்றுவதற்காக சீனக் கப்பல் ஒன்று இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளது.
கடந்த வருடம் மே மாதம் 20ஆம் திகதி நீர்கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையிலும் அதனை சூழவுள்ள கடற்பரப்பிலும் எக்ஸ்பிரஸ்...
வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதித் தடை நீக்கம்
அழகுசாதன பொருட்கள், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் ஏற்றுமதி நோக்கிலான ஆடை உற்பத்தி மூலப்பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதித் தடை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நீக்கப்பட உள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய...
நிர்மாணத்துறையில் எழுந்துள்ள சவால்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்
நிர்மாணத்துறையில் எழுந்துள்ள சவால்கள் மற்றும் உத்தேச எதிர்கால செயல்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (20) பிற்பகல் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நிர்மாணத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து...
ஆக்கிரமித்த பிராந்தியங்களில் இராணுவச் சட்டம்! புடின் பிரகடனம்
ரஷ்யா அண்மையில் தன்னோடு இணைத்துக்கொண்ட உக்ரைனின் நான்கு பிராந்தியங்களிலும் இராணுவச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.
நாட்டின் பாதுகாப்புச் சபை உறுப்பினர்களுடன் நடத்திய தொலைக்காட்சி உரையாடலின் போது அதிபர் புடின் இதனை அறிவித்துள்ளார்.
டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன்...
நெருங்குகிறது தீபாவளி – தோட்டப்பகுதியில் சமூர்த்தி நிறுத்தம்! பெரும் அநீதி என்கிறார் ராம்
" நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், சமூர்த்தி கொடுப்பனவே ஓரளவு ஆறுதல் நிவாரணமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் அந்த கொடுப்பனவையும் வழங்காமல் இழுத்தடிப்பது பெரும் அநீதியாகும். இது தொடர்பில்...
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சாரம் – மூன்று பெண்கள் கைது!
கொழும்பு இரத்மலானை பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் விடுதியை கல்கிஸ்சை பொலிஸார் நேற்று சுற்றிவளைத்துள்ளனர்.
கல்கிஸ்சை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது....
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறப்பு
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டு கொத்மலை ஆற்றில் வினாடிக்கு 200 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மலையக பகுதியில் பெய்தும் வரும் அடை மழை காரமணாக மேல் கொத்மலை...
ஹட்டனில் மண்சரிவு – ஒரு வீடு சேதம்
ஹட்டன் குடாகம பகுதியில் வீடொன்றின் மீது இன்று (21) காலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அந்த வீடு சேதமடைந்துள்ளது.
அட்டன் பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால் வீட்டின் பின்புறமுள்ள மண்மேடு சரிந்து வீட்டின்...
நானுஓயா – கிலாரண்டனில் மண் சரிவு! போக்குவரத்து பாதிப்பு!!
தொடர் மழையால் இன்று காலை நுவரெலியா - தலவாக்கலை பகுதியில் 105 ஆவது கிலோமீட்டர் தூரத்தில் கிலாரண்டன் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் நுவரெலியா, தலவாக்கலை மற்றும் மெராயா ஊடாக டயகமைக்கான போக்குவரத்து முற்றாக...
விபத்தில் தாயும், மகனும் பலி – தந்தை படுகாயம்!
டிப்பர் ரக வாகனமும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் தாயும், மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ, வலகும்புர பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
பொரலஸ்கமுவ பகுதியைச்...












