மக்கள் நிராகரிக்க முன் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் மஹிந்தவுக்கு சஜித் வலியுறுத்து
“உடல் பலமும், மனவலிமையும் குறைந்துள்ளதை மஹிந்த ராஜபக்ச உணர்ந்து, மக்கள் நிராகரிக்க முன் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
குறைந்த நிறைக் கொண்ட பாண் விற்பனை- 70 கடைகளுக்கு எதிராக நடவடிக்கை
குறைந்த நிறையை கொண்ட பாண் விற்பனை செய்த சுமார் 70 விற்பனை நிலையங்களை நேற்று (22) நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு குறைந்த நிறைக் கொண்ட பாண்களை விற்பனை செய்த கடை...
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 43 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்காக உனவட்டுன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 43 பேர் கடற்படையினரின் உதவியுடன் இன்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த 43 பேரும்...
கொரோனா பாதிப்பு நீங்கவில்லை-ஹேமந்த ஹேரத்
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த போதும் கொரோனா வைரஸின் பரவல் முற்றாக நீங்கவில்லை என்று பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மக்கள் முறையான சுகாதாரப் பழக்க வழக்கங்களைத்...
இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்தப்படும் செயற்பாடுகள் அதிகரிப்பு
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்தப்படும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது
கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் இது போன்று 8 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த கடத்தல் தொடர்பில் இந்திய பிரஜைகள் மற்றும்...
மாதகல் பகுதியில் 60 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 60 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்று (23) அதிகாலை 2 மணியளவில் மாதகல் கடற்கரையோரமாக...
நாடு திரும்பும் பசில் ராஜபக்ச
தற்போது அமெரிக்கா சென்றுள்ள பொதுஜன பொரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச எதிர்பாராதவிதமாக இலங்கைக்கு விஜயம் செய்ய தீர்மானித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கைவிட்ட பசில் ராஜபக்ச அமெரிக்கா சென்றிருந்தார்.
அத்துடன், அவர் அடுத்த ஆண்டு...
நாளைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா?
தீபாவளி தினத்திற்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் மூன்று தினங்களுக்கான மின்வெட்டு அறிவித்தலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் நேற்று மாலை அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தீபாவளி தினத்தன்றும்...
பாகிஸ்தானின் வெள்ள நிவாரணப் பணிகளில் பாரிய ஊழல்! உலக நாடுகள் அதிருப்தி!
பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகள் என்ற பேரில் மிக மோசமான ஊழல் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. மக்கள் பெருந்துயரில் இருக்கும் சந்தர்ப்பத்தில் நிவாரணப் பணிகளில் ஊழல் நடந்துள்ள இந்தச் சம்பவம் உலகளவில் பெரும்...
கொழும்பில் இலங்கை வங்கி ஊழியர்கள் போராட்டம்
இலங்கை வங்கியின் ஊழல் நிறைந்த தலைவரை நீக்கக்கோரி, தற்போது கொழும்பு கோட்டை, இலங்கை வங்கியின் தலைமையகத்துக்கு முன்பாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இலங்கை வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை வங்கியின் தலைவரை பதவி...











