மலையக தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாஷை ஆவணம் ஐ.நாவிடம் கையளிப்பு
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான கூட்டணி தூதுக்குழு, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூவை சந்தித்தது.
கூட்டணி பிரதி தலைவர் வெ. இராதாகிருஷ்ணன், எம்பி உதயகுமார்...
வட்டி வீத அதிகரிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வங்கிகளுக்கு ஆலோசனை
ஏற்கனவே பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும்...
இனிப்பு வகைகள் தொடர்பில் முறைப்பாடு
வௌிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் (Toffee) தரத்தை பரிசோதிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
வௌிநாடுகளில் இருந்து உரிய முறையை பின்பற்றாது கொண்டுவரப்படும் இனிப்பு பண்டங்களின் தரம் தொடர்பில் பல்வேறு...
பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்
900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்தடைந்த சுற்றுலா கப்பல்
அதிசொகுசு பயணிகள் கப்பல் ஒன்று, கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ளது.
Viking Mars என்ற கப்பலே இவ்வாறு இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
900 சுற்றுலா பயணிகளுடன் இந்த கப்பல் தற்போது கொழும்பை வந்தடைந்துள்ளது
பாடசாலை உபகரணங்களின் விலை தொடர்பான அறிவிப்பு!
செஸ் வரி (CESS) திருத்தம் காரணமாக அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களின் விலையில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை மாற்றியமைக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே...
கொழும்பு – பௌத்தலோக மாவத்தையில் போக்குவரத்து தடை
கொழும்பு – பௌத்தலோக மாவத்தையில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கிடையிலான சம்மேளனம் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு...
சிறுவர்களின் போஷாக்கின்மை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அர்ப்பணிப்பணிப்புடன் செயற்படத் தயார் – சந்திரிகா
சிறுவர்கள் எதிர்கொண்டுள்ள போஷாக்கின்மை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கத்தின் பங்குதாரராக இல்லாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சேவையாக சிவில் சமூகத் தலைவர்களுடன் இணைந்து அர்ப்பணிப்பணிப்புடன் செயற்படத் தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா...
கறுப்புச் சந்தையில் கூட மண்ணெண்ணெய் இல்லை- லக்ஸ்மன் கிரியெல்ல
கண்டி மாவட்டத்தில் தற்போது மண்ணெண்ணெய் இல்லை என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய கிரியெல்ல, பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் பெறுவதற்கு வழியில்லாததுடன், கண்டியில் கறுப்புச் சந்தையில் கூட...
இரசாயனப் பதார்த்தங்கள் பற்றாக்குறை- இரத்த பரிசோதனைகள் நிறுத்தம்
இரசாயனப் பதார்த்தங்களின் பற்றாக்குறையால் இரத்தப்பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலைகள் பல தெரிவித்துள்ளன.
லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, காசல் வீதி மகளிர் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் இவ்வாறு இரத்தப் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், தனியார் ஆய்வகங்களில்...












