கையடக்கத் தொலைபேசிகளின் விலை அதிகரிக்கப்படும்
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் (ACCOA) தெரிவித்துள்ளது.
சீமெந்து விலை குறைப்பு
50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலையை 100 ரூபாயால் குறைக்க INSEE Corporation மற்றும் INSEE Plus ஆகிய நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இந்த விலை குறைப்பு இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு...
கேஸ் விலை 300 ரூபாவால் குறைப்பு?
12.5 கிலோ லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 200 முதல் 300 ரூபாவரை குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நாளை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிற்றோ எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளது.
இந்நிலையிலேயே 200 முதல்...
மக்கள் விரோதச் செயலில் இறங்கினால் பின்வாங்க நேரிடும் – மைத்திரி எச்சரிக்கை
" மக்கள் விரோத செயற்பாட்டை முன்னெடுத்தால் இறுதியில் பின்வாங்க வேண்டிய நிலையே ஏற்படும் என்பதற்கு அதிஉயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட்டுள்ளமை சிறந்த சான்றாகும்."
இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள்...
பேராதனை பல்கலையில் மற்றுமொரு மாணவன் மாயம் – கடிதமும் சிக்கியது
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மூன்றாம் வருட மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று(03) காலை முதல் குறித்த மாணவர் காணாமல் போயுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனேமுல்ல...
விமலசுரேந்திர நீர்தேக்கத்தில் நீர் மட்டம் அதிகரிப்பு – வான்கதவுகள் திறப்பு
தொடரும் கன மழை காரணமாக நோட்டன் பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்தேக்கத்தில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையால் குறித்த நீர் தேக்கத்தின் அனைத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவிப்பதுடன் நீர்தேக்க கரையோர பிரதேசத்தில்...
இனிமேல் ஆங்கில மொழியில் மட்டுமா சட்டக்கல்லூரி பரீட்சை?
2023ஆம் ஆண்டுக்குப் பின்னர் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும் என்று வெளியிட்டுள்ள வர்த்தமானியை மீள்பரிசீலனை செய்ய பிரதம நீதியரசரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதால் தமிழ், சிங்கள மாணவர்களின் அடிப்படை...
காசல்ரீ நீர் தேக்கத்தின் வான் கதவுகள் ஊடாக நீர் வெளியேற்றம்
களனி ஆற்றின் பிரதான கிளையாறான கெசல்கமுவ ஓயாவில் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது நீர் மின் நீர் தேக்கமான காசல்ரீ நீர்தேக்கம் அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ள நிலையில் அதன் தானியங்கி வான் கதவுகள்...
ஹர்ஷ டி சில்வா இராஜினாமா!
அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழுவில்) இருந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இராஜினாமா செய்துள்ளார்.
இதனால் ஏற்படும் வெற்றிடத்துக்கு பேராசிரியர் சரித ஹேரத்தை நியமிக்குமாறு...
பொருளாதார சவால்களை இலங்கை மக்கள் வெற்றிகொள்வர் – ஐஸ்லாந்து ஜனாதிபதி நம்பிக்கை
சமூக ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் இலங்கை மக்கள் பொருளாதார சவால்களை மிகவும் வெற்றிகரமாக கையாள்வார்களென ஐஸ்லாந்து ஜனாதிபதி Guoni Th. Johannesson நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை – ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையிலான...












