ஐக்கிய மக்கள் சக்தி பேரணிமீது நீர்த்தாரை பிரயோகம்!
ஐக்கிய மக்கள் சக்தியால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிமீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருதானை 'டெக்னிகல்' சந்தியில் வைத்தே, பாதுகாப்பு தரப்பினரால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை...
சுற்றுலா வந்த முதியவர் கடலுக்கு பலியானார்
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி கடற்கரையில் சுற்றுலா வந்த நபரொருவர் அலையில் அள்ளுண்டுச்சென்று உயிரிழந்துள்ளார் என குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
77 வயதுடைய களனி,கோணவல-தமுனுவெவ பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ.திலகரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடியாது
மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
போதிய நிதி மற்றும் இதர வசதிகள் இல்லாததால், வாக்குறுதி அளித்தபடி உள்ளாட்சி தேர்தலை நடத்தும் நடவடிக்கைகள் தடைபட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு...
தொலைபேசியால் பறிபோன பாடசாலை மாணவனின் உயிர்
நீர்கொழும்பில் உள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவன் கொச்சிக்கடை பாலத்தில் இருந்து மாஓயாவில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த...
அஞ்சலோ மத்தியூஸ் குறித்து மஹேல வெளியிட்டுள்ள அறிவிப்பு
தொடர்ச்சியான திறமையை வெளிப்படுத்தினால் அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் எதிர்வரும் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட இன்னும் வாய்ப்பு இருப்பதாக இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசனை...
சிவனொளிபாதமலை சென்ற பஸ் விபத்து- பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
நோட்டன்பிரிட்ஜ் – கினிகத்தேனை தியகல பிரதான வீதியில் டெப்லோ பகுதியில் நேற்றிரவு பஸ்ஸொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 அதிகரித்துள்ளது.
நேற்று இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், இன்று காலை ஒரு சடலம்...
அருணாச்சல்: ரங்கபாரா அஸ்ஸாமில் உள்ள புத்த மடாலயத்தில் TMWS உறுப்பினர்கள் Dungse Rizin Dorjee Rinpoche ஐ சந்தித்தனர்.
டுட்டிங் மெம்பா வெல்ஃபேர் சொசைட்டியின் (TMWS) தலைவர் பெமா டோர்ஜி கோச்சி, ஆலோசகர்கள் நிமா சாங்கே மற்றும் பலர், அஸ்ஸாமின் ரங்கபாராவில் உள்ள தாஷி சோலிங் பௌத்த மடாலயத்தில் அவரது புகழ்பெற்ற டங்சே...
தேர்தலை ஒத்திவைக்க இடமளியோம் – சுமந்திரன் சூளுரை
“தேர்தல் நடக்குமா, இல்லையா என்ற கேள்விக்கு மத்தியில் நாங்கள் பரப்புரை செய்கின்றோம். தேர்தல் நடக்க வேண்டும். நடத்த வைப்போம். நாங்கள் தேர்தல் நடக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் சொல்கின்றோம். தேர்தல் நடக்காமல்...
தேர்தலை இடைநிறுத்தக்கோரும் மனுமீதான விசாரணை 23 இல்!
உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இடைநிறுத்த உத்தரவிடுமாறுகோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுமீதான விசாரணை 23 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இடைநிறுத்த உத்தரவிடுமாறுகோரி, இராணுவ கேர்ணல் (ஓய்வுநிலை)...
தென் சீனக் கடலில் அமெரிக்கா நடத்திய பயிற்சிக்குப் பிறகு தாய்வானைச் சுற்றும் சீன ஜெட் விமானங்கள்
தென் சீனக் கடலில் அமெரிக்க கடற்படை மற்றும் மரைன் கார்ப்ஸ் கூட்டுப் பயிற்சியை நடத்திய பின்னர், தாய்வானைச் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட சீன விமானங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தாய்வானைச் சுற்றி 18 PLA விமானங்களும் 4...












