10 எம்.பிக்களின் பதவி பறிபோகும் அபாயம்!
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேறியுள்ள நிலையில், இரட்டைப் பிரஜாவுரிமைகளையுடைய 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி இரத்தாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரட்டைப் பிரஜாவுரிமையைக் உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு 22...
எட்டு தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு!
அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின்படி, இலங்கை நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், சிறையிலுள்ள 08 தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் பல...
மீன் வெட்டிய கத்தியை பறித்து மனைவி மீது வெட்டிய கணவன்
யாழ். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டிக்கொண்டு பாடுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
சந்தைக்கு சென்று மீனுடன் வந்த கணவன் அதனை...
நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
களனி ஆற்றின் பிரதான கிளையாறான கெசல்கமுவ ஓயாவில் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது நீர் மின் நீர் தேக்கமான காசல்ரீ நீர்தேக்கம் அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ள நிலையில் அதன் தானியங்கி வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர்...
புகையிரத பாதையில் இடிந்து விழுந்த குப்பை மேடு – மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மலையகப் புகையிரத பாதையில் அட்டன் புகையிரத நிலையத்தை அண்மித்த புகையிரதப் பாதையில் இன்று 24.10.2022 காலை பாரிய குப்பை மேடு சரிந்து விழுந்ததாக அட்டன் புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அட்டன் மற்றும் கொட்டகலை...
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் 20 ஆயிரத்து 573...
தெற்காசியாவின் முதலாவது வணிக பூங்கா இலங்கையில்?
தெற்காசியாவின் முதலாவது வணிக பூங்காவை இலங்கையில் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வணிக பூங்காவை ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தெற்காசியாவின் முதலாவது...
உடலை மசாஜ் செய்ய மூன்று சிறார்களை நிர்ப்பந்தித்த பிக்கு கைது
காலி பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் மூன்று சிறார்களை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் அங்குள்ள சிரேஷ்ட பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுவர் பிக்கு உள்ளிட்ட மூன்று சிறார்களையும் தனது உடலை...
மீண்டும் எரிவாயு விலை குறைப்பு?
உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு எரிவாயு விலை அடுத்த மாதம் மேலும் குறையலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனம் உலக வங்கியிடமிருந்து பெற்ற கடனை...
தமிழகத்தில் மேலும் நால்வர் தஞ்சம்
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றும் 4 பேர் அகதிகளாகத் தமிழகம் சென்றுள்ளனர்.
மன்னாரிலிருந்து படகு மூலம் தப்பிச் சென்றவர்கள் இந்தியாவின் ஆளுகையின் இராமேஸ்வரத்தில் இன்று அதிகாலை தரை இறக்கி விடப்பட்டனர்.
அவர்களை...










