22 குறித்த உயர்நீதிமன்றின் சட்ட வியாக்கியானம் அறிவிப்பு
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் அரசமைப்புக்கு உட்பட்டமாக அமைந்திருந்தாலும் சில சரத்துகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று...
பளையில் 1,840 ஏக்கர் காணி இராணுவத்துக்குத் தாரைவார்ப்பு
கிளிநொச்சி மாவட்டம், பளைப் பகுதியில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணியில் இராணுவத்தினர் பண்ணை அமைக்க 1,840 ஏக்கர் நிலம் வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதலுக்குப் பத்திரம் நகர்கின்றது.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு பளைப்...
பிறப்புச் சான்றிதழ்கள் இனி டிஜிட்டல் வடிவில்
இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் பிறப்புச் சான்றிதழ்களை தற்போது டிஜிட்டல் வடிவில் வழங்கி வருகிறது.
2022 ஒகஸ்ட் 1ஆம் திகதிக்குப் பின்னர் பிறந்த மற்றும் பிறக்கும் குழந்தைகள் டிஜிட்டல் வடிவிலான பிறப்புச் சான்றிதழ்களைப் பெறுவார்கள் என...
பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் தெரிவு
பிரிட்டன் பிரதமர் பதவிக்கான உள்கட்சிப் போட்டியில் ரிஷி சுனக்கை விட 21 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார்.
பிரிட்டனில் ஆளும் கொன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிகளை...
A/L பரீட்சை பெறுபேறு – ஊவா மாகாணம் 2 ஆம் இடம்! 5 ஆவது இடத்தில் மத்திய .மாகாணம்
கபொத உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், கல்வி அமைச்சு செய்த பகுப்பாய்வு அறிக்கையின்படி கிழக்கு மாகாணம் முதலிடத்தில் தெரிவாகி இருக்கின்றது.
இரண்டாவது இடத்தில் ஊவா மாகாணம், மூன்றாம் இடத்தில் வடக்கு மாகாணம் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த...
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது – முக்கிய விவாதங்களுக்கு ஏற்பாடு
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
முற்பகல் 9.30 மணி முதல் 10. 30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று இடம்பெறும்.
அதன்பின்னர், 10.30 மணி முதல் 10.45...
இறுதிப்போட்டிக்குள் நுழையுமா இலங்கை? இந்தியாவுடன் இன்று பலப்பரீட்சை
ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
சுப்பர் 4 சுற்றில் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. எனினும், பாகிஸ்தானுடனான போட்டியில் இந்தியா தோல்வி...
நுவரெலியா உட்பட 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
சீரற்ற வானிலை தொடரும் நிலையில் நுவரெலியா உட்பட எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை, கேகாலை, குருநாகல், இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய...
ஐ.தே.கவின் தலைவர்களாக செயற்பட்டவர்கள் தொடர்பான பார்வை…1947 – 1994
1.டி.எஸ். சேனாநாயக்க
1946 செப்டம்பர் 6 ஆம் திகதியே ஐக்கிய தேசியக்கட்சி உதயமானது. அதன் ஸ்தாபகத் தலைவராக டி.எஸ். சேனாநாயக்க நியமிக்கப்பட்டார்.
காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரமடைய வேண்டும் என அரசியல் ரீதியில் தலைமைத்துவம் வழங்கியவர்களில்...
5000 பேரின் பங்கேற்புடன் ஐ.தே.கவின் 76 ஆவது மாநாடு இன்று!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியின் 76 ஆவது ஆண்டு விழா இன்று (06) கொண்டாடப்படுகின்றது.
'ஒன்றிணைவோம்' என்ற மகுடவாசகத்துடன் கொழும்பு, சுகசதாச விளையாட்டரங்கில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
1946 செப்டம்பர் 06 ஆம்...












