கோதுமை மாவின் விலை அதிகரிப்பு
கோதுமை மாவின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக பிரீமா நிறுவனம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, கோதுமைமா கிலோ ஒன்றின் விலையை 40 ரூபாவால் அதிகரித்துள்ளதாக பிரீமா...
அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களைத்தவிர, ஏனைய அரச ஊழியர்கள் நாளைய (20) தினம் பணிக்கு வரவேண்டியதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அத்துடன்,...
எம்.பிக்களுக்கு வலுகை விலையில் எரிபொருள் விநியோகமா?
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்று வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின்...
தவிசாளர் குழாமில் சாணக்கியன், வேலுகுமார்!
நாடாளுமன்றத்தில் இன்று புதிய தவிசாளர் குழாம் சபாநாயகர், மஹிந்த யாப்பா அபேவர்தனவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.சாந்த பண்டார
2.வேலுகுமார்
3.மயந்த திஸாநாயக்க
4.ஹர்ஷன ராஜகருண
5.ரோஹினி குமாரி விஜயரத்ன
6.ஹேஷா விதானகே
7.கோகிலா குணவர்தன
8.பிரேம்நாத் தொலவத்த
9.வசந்தயாப்பா பண்டார
10.இரா. சாணக்கியன்
11. வீரசுமன வீரசிங்க
12.சுரேன் ராகவன்
13. ஹரினி...
புதிய எம்.பி. பதவிப்பிரமாணம்!
பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக ஜகத் சமரவிக்ரம, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டாா்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியபோதே அவர் உறுதியுரை ஏற்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன...
எம்.பிக்களுக்கு தனி எரிபொருள் நிரப்பு நிலையம்?
நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு, நாரஹேன்பிட்டியிலுள்ள பொலிஸ் போக்குவரத்து பிரிவிலுள்ள எரிபொருள் நிலையம் ஊடாக, எரிபொருளை வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு, சபாநாயகர் பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின்...
‘விசேட ஏற்பாடு வேண்டாம் -நாடாளுமன்றில் சாதாரண உணவையே தாருங்கள்’
அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொகுசு வாழ்க்கைக்காக பாராளுமன்றத்தை பயன்படுத்துவதாக மக்கள் மத்தியில் ஒரு தவறான எண்ணம் காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த தவறான எண்ணத்தை நிவர்த்தி...
மொட்டு கட்சி உறுப்பினரின் வீட்டில் 35 பவுண் நகை மாயம் – பொலிஸில் முறைப்பாடு
கண்டி மாநகர சபை பொதுஜன பெரமுன உறுப்பினர் சங்கீத் சில்வாவின் வீட்டுக்கு தீயிடப்பட்டதில் சுமார் 34 பவுண் எடை கொண்ட தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக,(18) அவரின் மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
மே – 09 சம்பவம் – ஆளுங்கட்சி எம்.பி. வீட்டில் 60 பவுன் தங்கம் மாயம்!
மே - 09 வன்முறை சம்பவத்தின்போது, ஆளுங்கட்சியின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான செஹான் சேமசிங்கவின் வீட்டில் இருந்து 60 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளது.
இது தொடர்பில்...
முதலீடுகளை மேற்கொள்ளுங்கள் – சஜித் அழைப்பு
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார். வெளிநாட்டவர்கள், இலங்கைக்கு...