நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாளைய தினம் (26) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேரமும் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி...
நாவலப்பிட்டியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஸ்டோல் தோட்டத்தில் சுமார் இரண்டு வயதுடைய சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பம் 25.08.2022 அன்று காலை இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.
இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை பொது மக்கள் கண்டு பொலிஸாருக்கு...
மன்னிப்பு கடிதத்தை கையளித்தார் ரஞ்சன்- ஓர் இரு நாட்களில் விடுதலையாகும் சாத்தியம்
நீதிமன்றத்தை அவமதித்தமைக்கு மன்னிப்பு கோரி ரஞ்சன் ராமநாயக்க சத்திக்கடதாசி சமர்ப்பித்தார்
நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதித்துறையை இழிவுபடுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்தமைக்கு...
டைல்கள்,கட்டுமானப் பொருட்களின் இறக்குமதி மீதான தடை தளர்த்தப்பட்டுள்ளது
கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான டைல்கள், பல மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களை சில நிபந்தனைகளின் கீழ் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சில இறக்குமதி...
இலங்கைக்கு 04 மில்லியன் டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வழங்க உலக சுகாதார அமைப்பு உறுதி
இலங்கை மக்களின் அவசர சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 04 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் வழங்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ்...
தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு?
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு வகையான எரிபொருள்கள் மொத்தமாக கிடைப்பதில்லை என இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின், தனியார் தாங்கிகள் உரிமையாளர் சங்கத்தின் இணை செயலாளர் டீ.வீ சாந்த...
முன்வைத்த காலை பின்வைக்கமாட்டோம் – டலஸ் சூளுரை
" தனியானதொரு அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இது விடயத்தில் முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்கமாட்டோம்."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து தனியாக சென்றுள்ள டலஸ் அழகப்பெரும எம்.பி. தெரிவித்தார்.
" அதிகாரத்தில் இருப்பவர்கள்...
குடும்பப் பெண் கொலை! தலவாக்கலைவாசி கைது!!
குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வெலிமடை – சாப்புகடே பகுதியில் குறித்த பெண் காணாமல்போனமை தொடர்பில் அவரது மகள் வெலிமடைப் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையில், குறித்த...
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்பவர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை...
30 இராஜாங்க அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பு!
அடுத்த அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னர் அரசாங்கம் 30 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேண்டுகோளுக்கு இணங்க...











